sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

குழந்தைகளுடன் மனைவி சென்றதால் கால்வாயில் குதித்து கணவர் தற்கொலை

/

குழந்தைகளுடன் மனைவி சென்றதால் கால்வாயில் குதித்து கணவர் தற்கொலை

குழந்தைகளுடன் மனைவி சென்றதால் கால்வாயில் குதித்து கணவர் தற்கொலை

குழந்தைகளுடன் மனைவி சென்றதால் கால்வாயில் குதித்து கணவர் தற்கொலை


ADDED : செப் 05, 2025 11:03 PM

Google News

ADDED : செப் 05, 2025 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராய்ச்சூர்: சிறு விஷயத்துக்காக கோபித்துக் கொண்டு, குழந்தைகளுடன் பிறந்த வீட்டுக்கு மனைவி சென்றதால், கால்வாயில் குதித்து கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

ராய்ச்சூர் மாவட்டம், லிங்கசகூர் தாலுகாவின், சிக்க உப்பேரி கிராமத்தில் வசித்தவர் ஈரண்ணா, 40. இவர் சுகாதாரத்துறையில் '108' ஆம்புலன்ஸ் ஊழியராக பணியாற்றினார்.

இவருக்கும், விஜயபுரா மாவட்டம், முத்தேபிஹால் தாலுகாவின், ஹலசகி கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும், 13 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருமணமான புதிதில், நன்றாக இருந்த மனைவியின் குணம் நாளடைவில் மாறியது. 'கூட்டு குடும்பத்தை விட்டு, தனிக்குடித்தனம் செல்ல வேண்டும்' என, பிடிவாதம் பிடித்தார்.

ஆனால் பெற்றோரை விட்டு பிரிந்து செல்ல, ஈரண்ணாவுக்கு விருப்பம் இல்லை. இதனால் தம்பதிக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.

சிறு, சிறு காரணங்களுக்கும் மனைவி வாக்குவாதம் செய்தார்.

கோபித்துக் கொண்டு மனைவி, குழந்தைகளுடன் பிறந்த வீட்டுக்கு சென்றுவிட்டார். ஊர் பெரியவர்கள் சமாதானம் செய்தும் பயன் இல்லை. மனைவி மனம் மாறவில்லை.

குழந்தைகள் மீது அதிக பாசம் வைத்திருந்த ஈரண்ணா, குழந்தைகளை பார்க்க முடியாமல் வருத்தம் அடைந்தார். இதுவே அவரை குடிப்பழக்கத்தில் தள்ளியது.

பல முறை மனைவியின் வீட்டுக்கு அழைத்தும் வர மறுத்தார். இதனால் மனம் வருந்திய ஈரண்ணா, நேற்று அதிகாலை, கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

லிங்கசகூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us