sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ துவரம் பருப்பு ஊக்கத்தொகை குவின்டாலுக்கு ரூ.450 உயர்வு

துவரம் பருப்பு ஊக்கத்தொகை குவின்டாலுக்கு ரூ.450 உயர்வு

துவரம் பருப்பு ஊக்கத்தொகை குவின்டாலுக்கு ரூ.450 உயர்வு


ADDED : பிப் 09, 2025 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2025 07:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: துவரம் பருப்புக்கான ஊக்கத்தொகை, குவின்டாலுக்கு 450 ரூபாய் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகாவின் வட மாவட்டங்களில் துவரம் பருப்பு அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. மத்திய அரசின் 2024 - 2025 ஆண்டுக்கான ஆதரவு விலை திட்டத்தில், துவரம் பருப்பு விலை குவின்டாலுக்கு 7,550 ரூபாயாக இருந்தது.

இந்நிலையில் துவரம் பருப்புக்கு குவின்டாலுக்கு 450 ரூபாய் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதாக அரசு நேற்று அறிவித்தது. இதற்கு தேவையான நிதியை சுழல் நிதியில் உள்ள தொகையில் இருந்து வழங்கவும், நிதித்துறை ஒப்புக்கொண்டுள்ளது. ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டு இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேளாண் விளை பொருள் சந்தைத் துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல் கூறியதாவது:

விவசாயிகள் நலனில் அக்கறை உள்ள காங்கிரஸ் அரசு, துவரம் பருப்புக்கான ஊக்கத்தொகையை குவின்டாலுக்கு 450 ரூபாய் உயர்த்தியுள்ளது.

துவரம் பருப்புகளை கொள்முதல் செய்ய மாநிலம் முழுவதும் 400 மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் விவசாயிகள் கவலைப்பட தேவை இல்லை. இந்த ஆண்டு விஜயபுரா மாவட்டத்தில் 10.25 லட்சம் ஏக்கரில் துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us