sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

அக்காவின் 4 வயது மகனை கொன்ற தங்கைக்கு 'ஆயுள்'

/

அக்காவின் 4 வயது மகனை கொன்ற தங்கைக்கு 'ஆயுள்'

அக்காவின் 4 வயது மகனை கொன்ற தங்கைக்கு 'ஆயுள்'

அக்காவின் 4 வயது மகனை கொன்ற தங்கைக்கு 'ஆயுள்'


ADDED : செப் 11, 2025 07:25 AM

Google News

ADDED : செப் 11, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கபல்லாபூர் : அக்காவின் மீது இருந்த வெறுப்பால், அவரின் 6 வயது மகனை கொன்ற தங்கைக்கு, மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்து உள்ளது.

சிக்கமகளூரின் முத்தகடஹள்ளியை சேர்ந்தவர் அம்பிகா. 37; திருமணமான இவர், கணவருடன் ஏற்பட்ட தகராறால், அவரை பிரிந்து, தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இவரின் அக்கா அனிதா, 42. இவருக்கு திருமணமாகி கணவர் விஸ்வநாத், மனுஸ்ரீ, 8, மது, 6, என இரு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். தங்கையான அம்பிகாவின் நடவடிக்கை பிடிக்காத அனிதா, அவ்வப்போது அவரை திட்டி வந்தார். அத்துடன் ஒழுங்காக இருக்கவில்லை என்றால், தாய் வீட்டில் இருந்து விரட்டி விடுவதாக மிரட்டி உள்ளார்.

இதனால் கோபமடைந்த அம்பிகா, 2023 நவ., 30ம் தேதி, அக்காவின் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த இரு குழந்தைகளுக்கும் தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி, அழைத்து சென்றார்.

ஹிரேனகவளி குறுக்கே உள்ள மாம்பழ தோட்டத்தில், அக்காவின் மகன் மதுவை கொன்று, குழி தோண்டி புதைத்தார். பின், அனுஸ்ரீயை ஆதரவற்றோர் ஆசிரமத்தில் சேர்ப்பதற்காக அவரை அழைத்து கொண்டு பெங்களூரு வந்தார்.

ஆட்டோவில், இது தொடர்பாக மொபைல் போனில் பேசிக் கொண்டு வருவதை கவனித்த ஆட்டோ ஓட்டுநர், நேரடியாக கப்பன் பார்க் போலீஸ் நிலையத்துக்கு சென்று விபரத்தை தெரிவித்தார். அவரிடம் போலீசார் விசாரித்தனர். இதற்கிடையில், மகன், மகளை காணவில்லை என்று சிக்கபல்லாபூர் குடிபண்டே போலீசில் அனிதா புகார் அளித்திருந்தார்.

பெங்களூரு கப்பன் போலீசார், குடிபண்டே போலீசாரை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினர். விரைந்து வந்த போலீசார், அம்பிகாவை கைது செய்து விசாரித்தனர். அப்போது, அக்காவின் மகன் மதுவை கொன்று, புதைத்ததை ஒப்புக் கொண்டார்.

இது தொடர்பான வழக்கு, சிக்கபல்லாபூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை நடத்திய நீதிமன்றம், மனுஸ்ரீயின் சாட்சியை ஆதாரமாக வைத்து, அம்பிகா குற்றவாளி என்று கூறி, அவருக்கு ஆயுள் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.






      Dinamalar
      Follow us