sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

நகராட்சி ஆகிறது மாலுார் டவுன் சபை

/

நகராட்சி ஆகிறது மாலுார் டவுன் சபை

நகராட்சி ஆகிறது மாலுார் டவுன் சபை

நகராட்சி ஆகிறது மாலுார் டவுன் சபை


ADDED : மே 26, 2025 12:16 AM

Google News

ADDED : மே 26, 2025 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாலுார் : ''மாலுார் டவுன் சபை தரம் உயர்த்தப்பட்டு நகராட்சி ஆகிறது,'' என, மாலுார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடா தெரிவித்தார்.

மாலுார் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த காங்கிரஸ் செயல்வீரர் கூட்டத்தில் நேற்று அவர் பேசியதாவது:

மாலுார் டவுன் சபையை, நகராட்சியாக தரம் உயர்த்த பல ஆண்டு கோரிக்கையாக இருந்து வந்தது. அந்த கனவு இப்போது பலித்துள்ளது. அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த டவுன் சபையில், 81 பேர் மட்டுமே துப்புரவு ஊழியர்கள் உள்ளனர். நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் 240 ஊழியர்கள் பணி செய்வர். நகர வளர்ச்சி, சுற்றுப்புற சுகாதாரம் சீராகும். மாலுார் நகர வளர்ச்சிக்கு 1.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையம் ஏற்படுத்த 21 கோடி ரூபாய்; இந்திரா உணவகம் ஏற்படுத்த 1.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

டவுன் சபை தலைவர் விஜயலட்சுமி, கோலார் மாவட்ட காங்கிரஸ் தலைவர் லட்சுமி நாராயணா உட்பட பலர் உடன் இருந்தனர்.

மாலுார் டவுன் சபையின் மக்கள் தொகை 80 ,௦௦௦ பேர். டவுன் சபையில், 27 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நகராட்சியாக தரம் உயர்த்தினால் வார்டு எண்ணிக்கையும் அதிகரிக்கும்.






      Dinamalar
      Follow us