sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பன்னர்கட்டா பூங்கா பெயரில்  பண மோசடி

/

பன்னர்கட்டா பூங்கா பெயரில்  பண மோசடி

பன்னர்கட்டா பூங்கா பெயரில்  பண மோசடி

பன்னர்கட்டா பூங்கா பெயரில்  பண மோசடி


ADDED : மே 01, 2025 05:36 AM

Google News

ADDED : மே 01, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பன்னர்கட்டா தேசிய பூங்காவில் சபாரி முன்பதிவு செய்வதில் போலி இணையதளம் மூலம் மோசடி நடந்தது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

பெங்களூரில் உள்ள பிரபலமான பன்னரகட்டா தேசிய பூங்காவில் சபாரி செய்ய இணையதளம் அல்லது நேரில் சென்று பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெறலாம்.

இந்நிலையில், பன்னர்கட்டா பூங்காவின் அதிகாரப்பூர்வ இணையதளம் போன்ற, அச்சு அசலாக போலி இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை. இதனால், பலரும் தங்கள் பணத்தை இழந்து உள்ளனர்.

இது குறித்து சமீபத்தில் பூங்கா நிர்வாகத்திற்கு தெரிந்தது. இந்நிலையில் பூங்கா நிர்வாகத்தின் இயக்குநர் சூர்யா சென் கூறியதாவது:

கடந்த சில நாட்களாக போலியான இணையதளம் மூலம் பெரியவர்களுக்கு 2,000 ரூபாயும், குழந்தைகளுக்கு 1,000 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்து உள்ளது. இந்த போலி இணையதளங்கள் மூலம் பலரும் தங்கள் பணத்தை இழந்து உள்ளனர்.

எனவே, சுற்றுலா பயணியர் 'www.bannerughattabiopark.org' என்ற இணையதளத்திற்கு சென்று மட்டும் பணம் செலுத்தவும். இதை தவிர மற்ற இணைய பக்கங்களுக்கு சென்று கட்டணங்கள் செலுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us