sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 காங்., அரசில் அதிக யானைகள் இறப்பு; : அசோக் குற்றச்சாட்டு காங்., அரசில் அதிக யானைகள் இறப்பு: எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றச்சாட்டு

/

 காங்., அரசில் அதிக யானைகள் இறப்பு; : அசோக் குற்றச்சாட்டு காங்., அரசில் அதிக யானைகள் இறப்பு: எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றச்சாட்டு

 காங்., அரசில் அதிக யானைகள் இறப்பு; : அசோக் குற்றச்சாட்டு காங்., அரசில் அதிக யானைகள் இறப்பு: எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றச்சாட்டு

 காங்., அரசில் அதிக யானைகள் இறப்பு; : அசோக் குற்றச்சாட்டு காங்., அரசில் அதிக யானைகள் இறப்பு: எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றச்சாட்டு


ADDED : டிச 25, 2025 07:36 AM

Google News

ADDED : டிச 25, 2025 07:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''சந்தன கடத்தல் வீரப்பன் காலத்தை விட, இன்றைய முதல்வர் சித்தராமையா ஆட்சி காலத்தில் தான், யானைகள் அதிக எண்ணிக்கையில் இறக்கின்றன,'' என, எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றம்சாட்டினார்

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மாநிலத்தில் யானைகள் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. சந்தன கடத்தல் வீரப்பன், 25 ஆண்டுகளில், 500 யானைகளை கொன்றிருப்பார். ஆனால், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்த, இரண்டரை ஆண்டுகளில் 206 யானைகள் இறந்துள்ளன.

யானைகள் மட்டுமின்றி, சிறுத்தை, மயில் உட்பட, வன விலங்குகளை பாதுகாக்க, அரசு அக்கறை காட்டவில்லை.

கர்நாடகாவில் வன விலங்குகள் சபாரி, சுற்றுலாத்துறையின் பெருமைக்குரிய விஷயமாக கருதப்பட்டது. ஆனால் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. யானைகள் இறப்பை கட்டுப்படுத்த, சபாரியை நிறுத்துவது மட்டுமே தீர்வா. இதை பற்றி வல்லுநர்களிடம், அரசு அறிக்கை பெற்றதா. ரிசார்ட் உரிமையாளர்களுடன் கமிஷன் டீல் பேச, இது போன்று நாடகமாடுகின்றனரா?

நகர்ப்பகுதிகளில் பாம்புகள் வளர்ப்பது, விற்பது தொடர்ந்து நடக்கிறது. இதை தடுக்க போலீசார், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு பக்கம் விதிமீறலாக இயங்கும் ரிசார்ட்டுகளின் மீது, கடுமையான நடவடிக்கை எடுப்பதை போன்று, காட்டி கொள்கிறது. மற்றொரு பக்கம் சட்டவிரோத செயல்கள் நடந்தும், கண் மூடி அமர்ந்திருக்கிறது.

இதற்கு முன் முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் சபாரிக்கு சென்றதில்லையா. இப்போது ஏன் தடை விதிக்கின்றனர். என் பெயரில் எந்த ரிசார்ட்டும் இல்லை. ஆனால் காங்கிரஸ் தலைவர்களின் பெயரில், பல ரிசார்ட்டுகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us