sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

நாக பாம்பு கடித்து பள்ளி மாணவி பலி

/

நாக பாம்பு கடித்து பள்ளி மாணவி பலி

நாக பாம்பு கடித்து பள்ளி மாணவி பலி

நாக பாம்பு கடித்து பள்ளி மாணவி பலி


ADDED : ஏப் 14, 2025 06:12 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லாரி : பல்லாரி மாவட்டத்தில் உள்ளது ஹோசா மோகா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ராவாணி, 15. இவர் அதே கிராமத்தில், அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சிறுமி, பழைய வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் தன் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, உறக்கத்தில் இருந்த சிறுமியை வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பு கடித்துள்ளது.

நேற்று காலையில் சிறுமி எழுந்திருக்கவில்லை. பெற்றோர் எழுப்ப முயற்சித்தனர். சிறுமியின் உடம்பில் அசைவோ, உணர்வோ இல்லை. அவரது உடம்பில் பாம்பு கடித்த அடையாளங்கள் இருந்ததை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமி இறந்து விட்டதையும் அறிந்தனர்.

ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை, பாம்பு வீட்டில் உள்ளதா என தேடினார். வீட்டிற்குள் மறைந்திருந்த பாம்பை அடித்து கொன்றார்.






      Dinamalar
      Follow us