ADDED : செப் 17, 2026 11:15 PM

பெங்களூரு: ''நான் இப்போது முதல்வர் அல்ல. என் பேச்சு, எடுபடாது. எந்த அளவுக்கு எடுபடும் என்பது, எனக்கு மட்டுமே தெரியும்,'' என, முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரின் விதான் சவுதாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நான் தற்போது முதல்வர் அல்ல. என் பேச்சுக்கு இப்போதும் முக்கியத்துவம் இருக்கும் என, பலர் நினைக்கின்றனர். நானும் கூட அப்படி தான் நினைத்திருந்தேன். ஆனால் என் பேச்சு எந்த அளவுக்கு எடுபடும், எடுபடாது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.
நரேந்திரமோடி பிரதமராக, அரசியல் அமைப்பே காரணம். நான் எட்டு ஆண்டுகள் முதல்வராக இருந போது, மாற்றங்களை கொண்டு வர, முயற்சித்தேன். பலரும் பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்டு, ஆட்சியில் அமர்த்தினர். இதற்கு முன், இளைஞர்கள் 'மோடி, மோடி' என்றனர். இப்போது இளைஞர்கள் மவுனமாகிவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
