/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தமிழ் அதிகாரி ராம்பிரசாத் மனோகர் பொறுப்பேற்பு
/
தமிழ் அதிகாரி ராம்பிரசாத் மனோகர் பொறுப்பேற்பு
ADDED : பிப் 03, 2026 06:09 AM

பெங்களூரு: கர்நாடகா மின் வினியோக கழக நிறுவனத்தின், புதிய நிர்வாக இயக்குநராக, தமிழரான, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராம்பிரசாத் மனோகர் நேற்று பொறுப்பேற்றார்.
பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவராக இருக்கும், தமிழரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராம் பிரசாத் மனோகருக்கு, கர்நாடக மின் விநியோக கழக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவி, கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்று அவர், கர்நாடகா மின் வினியோக கழகத்தின் புதிய நிர்வாக இயக்குநராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.
ஏற்கனவே, இந்த பொறுப்பில் இருந்த பங்கஜ்குமார் பாண்டே நிர்வாகம், சீர்திருத்த துறையின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

