sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

விதான் சவுதாவில் பயங்கரவாதிகள்: மத்திய அமைச்சர் குமாரசாமி 'பகீர்'

/

விதான் சவுதாவில் பயங்கரவாதிகள்: மத்திய அமைச்சர் குமாரசாமி 'பகீர்'

விதான் சவுதாவில் பயங்கரவாதிகள்: மத்திய அமைச்சர் குமாரசாமி 'பகீர்'

விதான் சவுதாவில் பயங்கரவாதிகள்: மத்திய அமைச்சர் குமாரசாமி 'பகீர்'


ADDED : நவ 11, 2025 04:31 AM

Google News

ADDED : நவ 11, 2025 04:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''பரப்பன அக்ரஹாரா சிறையில் இருப்பது போன்று, விதான் சவுதாவிலும் பயங்கரவாதிகள் உள்ளனர்,'' என, மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி பகீர் தகவல் கூறி உள்ளார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பரப்பன அக்ரஹாரா சிறையில் பயங்கரவாதி, பாலியல் வன்கொடுமை குற்றவாளி உள்ளிட்டோர் கையில் மொபைல் போன் கொடுத்து, ராஜ உபசாரம் அளிக்கின்றனர்.

சிறையில் இருப்பவர்களை விட, விதான் சவுதாவில் ஆபத்தான பயங்கரவாதிகள் உள்ளனர். விவசாயிகளை குண்டர்களை வைத்து மிரட்டி, நிலத்தை பறிப்பவர்களை பயங்கரவாதிகள் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது? முந்தைய பா.ஜ., அரசு மீது சுமத்திய 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை, இவர்களால் நிரூபிக்க முடியவில்லை.

பிடதியில் டவுன்ஷிப் அமைக்க நிலம் பெற, விவசாயிகளை ஒவ்வொரு நாளும் மிரட்டுகின்றனர். எனக்கு விவசாயிகள் அரசியல்ரீதியாக நிறைய வாய்ப்பு கொடுத்துள்ளனர். கஷ்ட காலத்தில் அவர்களுடன் நிற்பது என் கடமை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us