sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 சைபர் மோசடி புகார் அளித்தவரே குற்றவாளி என்பது அம்பலம்

/

 சைபர் மோசடி புகார் அளித்தவரே குற்றவாளி என்பது அம்பலம்

 சைபர் மோசடி புகார் அளித்தவரே குற்றவாளி என்பது அம்பலம்

 சைபர் மோசடி புகார் அளித்தவரே குற்றவாளி என்பது அம்பலம்


ADDED : நவ 14, 2025 05:25 AM

Google News

ADDED : நவ 14, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாவணகெரே: சைபர் குற்றவாளிகள் தன் பணத்தை கொள்ளையடித்ததாக, போலீசாரிடம் புகார் அளித்தவரே, சைபர் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருப்பதை, போலீசார் கண்டுபிடித்தனர்.

தாவணகெரே நகரின், நிடுவள்ளியில் வசிப்பவர் பிரமோத், 55. இவரது வங்கி கணக்கு, நடப்பாண்டு ஆகஸ்ட் 14ம் தேதி பிளாக் ஆனது. வங்கிக்கு சென்று விசாரித்த போது, ஐந்து நாட்களுக்கு பின் கணக்கு சரியாகும் என, அதிகாரிகள் கூறினர்.

இவர் ஆகஸ்ட் 25ல் கணக்கை ஆய்வு செய்த போது, வெறும் 4,956 ரூபாய் இருப்பது தெரிந்தது. 52,60,523 ரூபாய் குறைந்திருந்தது. இதை பற்றி வங்கியில் விசாரித்த போது, நெட் பேங்கிங் மூலம் பணம் பரிமாற்றம் ஆகியுள்ளதாக, மேலாளர் தெரிவித்தார்.

இது குறித்து ஆகஸ்ட் 29ம் தேதி, சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில், பிரமோத் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், பல கோணங்களில் விசாரணை நடத்தி, பேலுாரை சேர்ந்த சையத் அர்பாத், 38,என்பவரை கைது செய்தனர். அவரது மொபைல் போனை பறிமுதல் செய்தனர். அவரது கணக்கில் இரண்டு மாதங்களில், கோடிக்கணக்கான ரூபாய் பரிமாற்றம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின் விசாரணையை தீவிரப்படுத்தி, குஜராத்தின், ஆமதாபாத்தை சேர்ந்த சஞ்சய் குன்ட் என்பவரை கைது செய்தனர். இவரிடம் விசாரித்த போது, வங்கி கணக்குகளை விற்கும் விஷயம், வெளிச்சத்துக்கு வந்தது. அதுமட்டுமின்றி சைபர் குற்றவாளிகளுடன், பிரமோத்துக்கு தொடர்பிருப்பதையும் கண்டுபிடித்தனர்.

இவர் எந்த தொழிலும் செய்யவில்லை. ஆனால் அஞ்சனாத்ரி கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனம் பெயரில், வங்கியில் கணக்கு வைத்திருந்தார். இந்த கணக்கை சைபர் குற்றவாளிகள், பலரை மோசடி செய்த பணத்தை பரிமாற்றம் செய்ய பயன்படுத்தினர்.

இதற்காக பிரமோத்துக்கு கமிஷன் கொடுத்தனர். பிரமோத் உட்பட, பலரின் வங்கி கணக்குகளுக்கு, கோடிக்கணக்கான ரூபாய் பரிமாற்றம் செய்து, அவர்களுக்கு கமிஷன் கொடுத்து பணத்தை தங்களின் கணக்குக்கு பரிமாற்றம் செய்து கொண்டனர்.

அதே போன்று, பிரமோத் கணக்குக்கு அனுப்பிய பணத்தை, தங்களின் கணக்குக்கு மாற்றினர். ஆனால் இதற்கு கமிஷன் கொடுக்கவில்லை. எனவே கோபமடைந்த அவர், தன் வங்கி கணக்கில் இருந்த பணத்தை, சைபர் மோசடியாளர்கள் கொள்ளையடித்ததாக புகார் அளித்து, தானே போலீசாரிடம் சிக்கியுள்ளார்.






      Dinamalar
      Follow us