sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இரண்டு விவசாயிகள் ஒரே நாளில் தற்கொலை

/

இரண்டு விவசாயிகள் ஒரே நாளில் தற்கொலை

இரண்டு விவசாயிகள் ஒரே நாளில் தற்கொலை

இரண்டு விவசாயிகள் ஒரே நாளில் தற்கொலை


ADDED : ஜூலை 14, 2025 05:50 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹூப்பள்ளி : குந்த்கோல் தாலுகாவின், பரத்வாட் கிராமத்தில் ஒரே நாளில், இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

ஹூப்பள்ளி மாவட்டம், குந்த்கோல் தாலுகாவின் பரத்வாட் கிராமத்தில் வசித்த விவசாயிகள் ரவிராஜ் ஜாடர், 42, பசவன கவுடா பாட்டீல், 56. இவர்கள் வங்கி மற்றும் தனியாரிடம், லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கினர். அதை அடைக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

நான்கைந்து ஆண்டுகளாக, வறட்சி, வெள்ளப்பெருக்கால் விளைச்சல் பாழானது. போட்ட முதலீடும் கைக்கு வரவில்லை. தொடர்ந்து நஷ்டத்தை அனுபவித்தனர். மற்றொரு பக்கம் கடன்காரர்களின் நெருக்கடி அதிகரித்தது. மனம் நொந்த விவசாயிகள், நேற்று அதிகாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஒரே கிராமத்தில், இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குந்த்கோல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us