sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சிறுமி இறப்பு விவகாரத்தில் லஞ்சம் டாக்டர் உட்பட இருவர் கைது

/

சிறுமி இறப்பு விவகாரத்தில் லஞ்சம் டாக்டர் உட்பட இருவர் கைது

சிறுமி இறப்பு விவகாரத்தில் லஞ்சம் டாக்டர் உட்பட இருவர் கைது

சிறுமி இறப்பு விவகாரத்தில் லஞ்சம் டாக்டர் உட்பட இருவர் கைது


ADDED : ஜூன் 28, 2025 02:14 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாவேரி : ஹாவேரி நகரில் வசிக்கும் வந்தனா என்ற சிறுமியின் கை, கால்களில் கொப்பளங்கள் ஏற்பட்டன. இவரை ஹாவேரியில் உள்ள சிராயு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என, கூறி மருத்துவமனையில் சேர்த்துக் கொண்டனர்.

சிறுமிக்கு ஊசியுடன் சலைன் போட்டனர். சில நிமிடங்களில் அவர், விசித்திரமாக நடந்து சுய நினைவிழந்தார். பீதியடைந்த பெற்றோர், சிறுமியை வேறு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர், சிறுமி இறந்ததாக கூறினர்.

சிராயு மருத்துவமனை டாக்டர்களின் அலட்சியத்தால், மகள் இறந்ததாக ஹாவேரி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் மருத்துவமனைக்கு வந்து, விசாரணை நடத்தினர். சிறுமியின் இறப்பு குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பொறுப்பை, ஹாவேரி அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரி பேராசிரியர் குருராஜ் பீமராயாவிடம் ஒப்படைத்தனர்.

இவர், தனக்கு நெருக்கமான சென்னபசய்யா சங்கரய்யா குல்கர்னி மூலமாக, சிராயு மருத்துவமனை டாக்டர்களை தொடர்பு கொண்டார். 'அவர்களுக்கு சாதகமாக அறிக்கை அளிக்க, 5 லட்சம் ரூபாய் லஞ்சம் வேண்டும்' என, கேட்டார். பணம் இல்லையென கூறிய மருத்துவமனையினர், மூன்று லட்சம் ரூபாய் அளிக்க சம்மதித்தனர்.

நேற்று மதியம் பணத்தை வாங்க, குருராஜ் பீமராயாவும், சென்னபசய்யா சங்கரய்யா குல்கர்னியும், சிராயு மருத்துவமனைக்கு சென்றனர். பணத்தை வாங்கும்போது, தகவலறிந்து அங்கு வந்த லோக் ஆயுக்தா போலீசார், இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us