தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ முதல்வர் உத்தரவை மீறும் விதான் சவுதா ஊழியர்கள்

 முதல்வர் உத்தரவை மீறும் விதான் சவுதா ஊழியர்கள்

 முதல்வர் உத்தரவை மீறும் விதான் சவுதா ஊழியர்கள்


ADDED : ஜூன் 16, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'பணிக்கு சரியான நேரத்தில் வர வேண்டும்' என்ற முதல்வர் சிவகுமாரின் உத்தரவை, விதான் சவுதா அலுவலக ஊழியர்கள் கடைப்பிடிக்கவில்லை.

கர்நாடக முதல்வராக சிவகுமார் பொறுப்பேற்றதும், விதான் சவுதாவில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் காலை 10:00 மணிக்கு பணிக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஆனாலும் விதான் சவுதா அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் யாரும் காலை 10:00 மணிக்கு வருவது இல்லை. முதல்வர் உத்தரவை கடைப்பிடிக்கவில்லை.

காலை 11:00 மணிக்கு மேல் தான் அதிகாரிகள் வருகின்றனர்; சில ஊழியர்கள் காலை 10:30 மணிக்கு வருகின்றனர்.

அதிகாரிகளிடம் கேட்டால், அலுவல் பணியாக வெளியே சென்று வந்ததால், தாமதம் ஆவதாக கூறுகின்றனர். கீழ்நிலை ஊழியர்களிடம் கேட்டால் பதிலே இல்லை. இதற்கு முதல்வர் என்ன முடிவு எடுப்பார் என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us