sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

வீரேந்திர பப்பியின் சொத்துகள் ரூ.55 கோடி, 5 கார் முடக்கம்

/

வீரேந்திர பப்பியின் சொத்துகள் ரூ.55 கோடி, 5 கார் முடக்கம்

வீரேந்திர பப்பியின் சொத்துகள் ரூ.55 கோடி, 5 கார் முடக்கம்

வீரேந்திர பப்பியின் சொத்துகள் ரூ.55 கோடி, 5 கார் முடக்கம்


ADDED : செப் 04, 2025 03:47 AM

Google News

ADDED : செப் 04, 2025 03:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைதாகி உள்ள, சித்ரதுர்கா காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பிக்கு சொந்தமான 55 கோடி ரூபாய் ரொக்கம், ஐந்து விலை உயர்ந்த கார்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

அண்டை மாநிலமான கோவாவில் சூதாட்ட விடுதிகளில் நடத்தி, அதில் கிடைத்த பணத்தை, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்த வழக்கில், சித்ரதுர்கா காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பியை அமலாக்கத்துறை கைது செய்தது. அவரை தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், சட்டவிரோதமாக நடத்திய ஆன்லைன் சூதாட்டத்தில் கிடைத்த பணத்தில், ஐந்து விலை உயர்ந்த கார்களை வீரேந்திர பப்பி வாங்கியது தெரிந்தது. இதுதவிர 9 வங்கிக் கணக்குகளில் 55 கோடி ரூபாய் ரொக்கம் இருப்பதும் தெரியவந்தது. பணம், கார்களை அமலாக்கத்துறை நேற்று முடக்கியுள்ளது. ஏற்கனவே, 12 கோடி ரொக்கம் உட்பட மொத்தம், 18 கோடி மதிப்புள்ள பணம், தங்க நகைகளை அமலாக்கத்துறை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us