/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மருமகனுடன் ஓடியதாக குற்றச்சாட்டு திரும்பி வந்த பெண் கணவர் மீது புகார்
/
மருமகனுடன் ஓடியதாக குற்றச்சாட்டு திரும்பி வந்த பெண் கணவர் மீது புகார்
மருமகனுடன் ஓடியதாக குற்றச்சாட்டு திரும்பி வந்த பெண் கணவர் மீது புகார்
மருமகனுடன் ஓடியதாக குற்றச்சாட்டு திரும்பி வந்த பெண் கணவர் மீது புகார்
ADDED : ஜூலை 01, 2025 03:30 AM

தாவணகெரே: மருமகனுடன் ஓடியதாக கூறப்பட்ட மாமியார், திடீரென வீடு திரும்பினார். கணவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்.
தாவணகெரே மாவட்டம், சென்னகிரி தாலுகாவின் முத்தேனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் நாகராஜ். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
மனைவி இறந்ததால் 13 ஆண்டுகளுக்கு முன்பு, சாந்தா, 55, என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, நாகராஜின் மூத்த மகள் ஹேமாவை, கணேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
திருமணத்துக்கு முன்பே, சாந்தாவுக்கும், கணேஷுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இவர்கள் நெருக்கமாக உள்ள வீடியோ, போட்டோக்களை ஹேமா, தன் கணவரின் மொபைல் போனில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த விஷயத்தை தன் தந்தையிடம் கூறினார்.
கள்ளத்தொடர்பு அம்பலமானதால், வீட்டில் இருந்த பணம், தங்க நகைகளை திருடிக் கொண்டு, சாந்தா, தன் மருமகன் கணேஷுடன் ஓடியதாக தகவல் வெளியானது.
மனைவியை காணவில்லை என, சென்னகிரி போலீஸ் நிலையத்தில், நாகராஜ் புகார் செய்திருந்தார்.
போலீசாரும் தேடி வந்த நிலையில், சாந்தா திடீரென நேற்று முன்தினம் கணவர் வீட்டுக்கு திரும்பினார். ஆனால், கணேஷ் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
தான் வீட்டை விட்டுச் செல்ல கணவரே காரணம் என, சாந்தா குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:
என் பெயரில் கணவர் நாகராஜ், லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கினார். கடனை அடைக்கவில்லை. என்னை நெருக்கடியில் சிக்க வைத்தார். என்னை மன ரீதியில் துன்புறுத்தினார்.
என்னை அடித்து விரட்டி, உறவினர் வீட்டில் இருக்கும்படி செய்தனர். நான் ஓடிப்போனதாக பொய் சொல்கின்றனர்.
வீடு கட்டவும், மகளின் திருமணத்துக்கும் கடன் வாங்கினார். இதை அடைக்காததால், கடன்காரர்கள் என்னிடம் கேட்டனர். இதை அடைக்கும்படி கூறியும் பொருட்படுத்தவில்லை.
கணவரின் தொந்தரவால் வீட்டை விட்டு சென்றேன். எனக்கு கணேஷை பற்றி, எதுவும் தெரியாது. அவர் எங்கு சென்றார் என்பதும் தெரியாது.
என் மகளை விட, கணேஷை நான் நன்றாக பார்த்துக் கொண்டேன். இதனால் எங்களுக்குள் கள்ளத்தொடர்பு உள்ளதாக கதை கட்டியுள்ளனர்.
என் மானம், மரியாதையை பாழாக்கினர். நான் எங்கும் ஓடி போகவில்லை. இதே ஊரில்தான் இருந்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.