sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பெட்டி கடைகளில் மது விற்பனை எம்.எல்.ஏ.,விடம் பெண்கள் புகார்

/

பெட்டி கடைகளில் மது விற்பனை எம்.எல்.ஏ.,விடம் பெண்கள் புகார்

பெட்டி கடைகளில் மது விற்பனை எம்.எல்.ஏ.,விடம் பெண்கள் புகார்

பெட்டி கடைகளில் மது விற்பனை எம்.எல்.ஏ.,விடம் பெண்கள் புகார்


ADDED : ஏப் 22, 2025 05:15 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: 'தங்கவயல் தாலுகா, என்.ஜி.ஹுல்கூர் பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்பனை நடப்பதை தடுக்க வேண்டும்' என, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலாவிடம் கிராம மக்கள் நேற்று புகார் செய்தனர்.

என்.ஜி.ஹுல்கூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல கிராமங்களில் சட்ட விரோதமாக பெட்டி கடைகளிலும், சிலரின் வீடுகளிலும் மது விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் பலரின் வீடுகளில் குடும்ப தகராறு, சண்டை சச்சரவுகள் சர்வ சாதாரணமாகிவிட்டன. தெருக்களில் போதையில் மோதல்களும் நடப்பதால் நிம்மதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், என்.ஜி.ஹுல்கூருக்கு சென்ற தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலாவிடம், 'சட்ட விரோத மது விற்பனையை தடுக்க வேண்டும்' என கிராம மக்கள் வலியுறுத்தினர்.

அப்போது போதையில் இருந்த ஒருவர் அங்கு தகராறு செய்தார். போலீசாரையும் பிடித்து தள்ளினார். இதைத் தொடர்ந்து அப்பகுதியினர், போதையில் இருந்தவரை வெளியேற்றினர்.

அங்கிருந்த பெண்களிடம் ரூபகலா கூறுகையில், ''சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us