sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

புலி தாக்கி தொழிலாளி பலி

/

புலி தாக்கி தொழிலாளி பலி

புலி தாக்கி தொழிலாளி பலி

புலி தாக்கி தொழிலாளி பலி


ADDED : அக் 27, 2025 03:40 AM

Google News

ADDED : அக் 27, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: நிலத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்த விவசாயியை, புலி தாக்கி கொன்றது. இதனால் கிராமத்தினர் பீதியில் உள்ளனர்.

மைசூரு மாவட்டம், சரகூர் தாலுகாவின், பென்னகெரே கிராமத்தில் வசித்தவர் விவசாயி ராஜசேகர், 58. இவர், நேற்று மதியம் கிராமத்தை ஒட்டியுள்ள நிலத்தில், மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது புலி பாய்ந்து தாக்கிவிட்டு ஓடியது. இதில் பலத்த காயமடைந்த விவசாயி, சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இதை பார்த்த சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரும் அங்கு வந்து, விவசாயி உடலை மீட்டனர். தகவல் அறிந்து, வனத்துறை அதிகாரிகளும் கிராமத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

புலியை பிடிக்கும்படி கிராமத்தினர், வேண்டுகோள் விடுத்தனர். வனத்துறை ஊழியர்கள் புலியை தேடுகின்றனர்.

'புலி நடமாட்டம் இருப்பதால், கிராமத்தினர் கவனமாக இருக்க வேண்டும். தனியாக யாரும் நடமாட வேண்டாம். சிறு குழந்தைகள், வளர்ப்பு பிராணிகளை வெளியே விட வேண்டாம்' என, அறிவுறுத்தினர்.






      Dinamalar
      Follow us