ADDED : ஜூன் 06, 2026 04:02 AM

தங்கவயல்: தங்கவயலில் நீதித்துறை, வரு வாய் துறை, வனத்துறை, நகராட்சி இணைந்து, உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, பல இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
மினி விதான் சவுதா எனும் வட்டார நிர்வாக அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். நீதிமன்றம் முன் உள்ள அம்பேத்கர் சாலையிலும் மரக் கன்றுகள் நடப்பட்டன.
தங்கவயலில் நடந்த நிகழ்ச்சியில், நீதித் துறை சார்பில் மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி சிவகுமாரா, நீதிபதிகள் ஜெயலட்சுமி கே.வி.நாகேஷா, ஸ்மிதா, வக்கீல்கள் சங்க தலைவர் ராஜகோபால கவுடா, பொதுச்செயலர் ஆர்.ஜோதிபாசு, தாசில்தார் பாரத், நகராட்சி ஆணையர் ஸ்ரீதர், சுகாதார அதிகாரி மங்கள கவுரி உட்பட பலர் பங்கேற்றனர்.
ராபர்ட்சன் பேட்டை சுமதி ஜெயின் பள்ளி மாணவர் கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பதா கைகள் ஏந்தி முழக்கமிட்டு நகரில் ஊர் வலம் வந்தனர்.
