/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காதல் திருமணம் செய்த இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை; கணவர் கைது
/
காதல் திருமணம் செய்த இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை; கணவர் கைது
காதல் திருமணம் செய்த இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை; கணவர் கைது
காதல் திருமணம் செய்த இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை; கணவர் கைது
ADDED : ஜூலை 26, 2025 04:56 AM

மாதநாயக்கனஹள்ளி: காதல் திருமணம் செய்த, இளம்பெண் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அடித்துக் கொல்லப்பட்டதாக பெற்றோர் அளித்த புகாரில், கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு ரூரல் அஞ்சேபாளையா கிராமத்தை சேர்ந்தவர்கள் அபிஷேக், 25, ஸ்பந்தனா, 24. இவர்கள் இருவரும் காதலித்தனர். காதலுக்கு ஸ்பந்தனா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டைவிட்டு வெளியேறி காதலனை, ஸ்பந்தனா திருமணம் செய்து கொண்டார். இதன் பின், மகளை பெற்றோர் ஏற்றுக் கொண்டனர்.
திருமணமான புதிதில் மகிழ்ச்சியாக சென்ற, தம்பதியின் வாழ்க்கையில், வரதட்சணையால் புயல் வீச துவங்கியது. அபிஷேக்கும், அவரது குடும்பத்தினரும் வரதட்சணை வாங்கி வரும்படி, ஸ்பந்தனாவுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். இதுபற்றி பெற்றோரிடம் கூறி இருந்தார்.
ரூ.5 லட்சம் இரண்டு மாதங்களுக்கு முன், அபிஷேக்கிற்கு வரதட்சணையாக ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. ஆனாலும் கூடுதல் வரதட்சணை கேட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 12:45 மணிக்கு தன் சகோதரிக்கு, 'வாட்ஸாப்'பில் குறுந்தகவல் அனுப்பிய ஸ்பந்தனா, 'என் சாவுக்கு கணவர் அபி, அவரது குடும்பத்தினர், அபியுடன் வேலை செய்பவர்கள் காரணம்' என, குறிப்பிட்டு இருந்தார்.
நேற்று அதிகாலை 2:30 மணிக்கு, ஸ்பந்தனாவின் தந்தையிடம் மொபைல் போனில் பேசிய அபிஷேக், 'உங்கள் மகள் துாக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளேன்' என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.
அடித்து கொன்றதாக... பதறியடித்துக் கொண்டு ஸ்பந்தனாவின் பெற்றோர், அபிஷேக் வீட்டிற்கு சென்றனர். ஸ்பந்தனா இறந்தது தெரிந்தது. தகவல் அறிந்த மாதநாயக்கனஹள்ளி போலீசார், ஸ்பந்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
நேற்று காலை அபிஷேக் மீது மனைவியின் பெற்றோர் புகார் செய்தனர். வரதட்சணையால் மகளை அடித்துக் கொன்று, துாக்கில் தொங்கவிட்டதாக கூறினர். அந்த புகாரின் அடிப்படையில், அபிஷேக் கைது செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் மதியம் அபிஷேக்கிற்கு, அவருடன் வேலை செய்யும் இளம்பெண் ஒருவர் போனில் பேசி உள்ளார். ஸ்பந்தனா வந்ததும் போன் அழைப்பை அபிஷேக் துண்டித்துள்ளார்.
இது பற்றி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதுவும் ஸ்பந்தனா மரணத்திற்கு காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

