ADDED : செப் 04, 2024 12:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:வாடிக்கையாளர்களுக்கு தொல்லை தரும் அழைப்புகளை மேற்கொண்டு வந்ததாக, 2.75 லட்சம் தொலைபேசி எண்களை 'ட்ராய்' முடக்கியுள்ளது. முறையாக பதிவு செய்யாத, 'டெலி மார்க்கெட்டிங்' நிறுவனங்களின் தொலைபேசி எண்களை முடக்க, தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு, 'ட்ராய்' ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், நடப்பாண்டின் முதல் அரையாண்டில், 50 நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதாக 'ட்ராய்' நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால், தொல்லை தரும் அழைப்புகள் எண்ணிக்கை குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது.