sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

சில்லரை விலை பணவீக்கத்தை கணக்கிடுவதில் உணவு பொருட்களின் பங்கை குறைக்க பரிசீலனை

/

சில்லரை விலை பணவீக்கத்தை கணக்கிடுவதில் உணவு பொருட்களின் பங்கை குறைக்க பரிசீலனை

சில்லரை விலை பணவீக்கத்தை கணக்கிடுவதில் உணவு பொருட்களின் பங்கை குறைக்க பரிசீலனை

சில்லரை விலை பணவீக்கத்தை கணக்கிடுவதில் உணவு பொருட்களின் பங்கை குறைக்க பரிசீலனை


ADDED : ஆக 08, 2024 01:02 AM

Google News

ADDED : ஆக 08, 2024 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:சில்லரை விலை பணவீக்க குறியீட்டை மாற்றியமைப்பதற்காக மத்திய அரசு அமைத்துள்ள குழு, இக்குறியீட்டில் உணவுப் பொருட்களின் பங்கை குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொத்தம் 299 பொருட்களுக்கான விலையை கண்காணித்து, மாதந்தோறும் சில்லரை விலை பணவீக்கம் கணக்கிடப்படுகிறது.

கடந்த 2011 - 12ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு பணவீக்கம் கணக்கிடப்படுகிறது. இந்த மொத்த பொருட்களும் பிரிவு வாரியாக பகுக்கப்பட்டு, மக்களின் செலவினத்தை பொறுத்து, பணவீக்கத்தை கணக்கிடுவதில் ஒவ்வொரு பிரிவுக்கும் குறிப்பிட்ட சதவீதம், முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் உணவு மற்றும் பானங்கள் பிரிவுக்கு தற்போது 54.20 சதவீத பங்கு வழங்கப்படுகிறது.

உணவுக்கான செலவு


தற்போது பணவீக்கத்தை கணக்கிட பயன்படுத்தப்படும் தரவுகள், 2011 - 12ம் ஆண்டு திரட்டப்பட்ட குடும்பங்களின் நுகர்வு செலவு முறைகளை சார்ந்தது.

இதன்பிறகு, 10 ஆண்டுகளுக்குப் பின், 2022ம் ஆண்டில் தான், குடும்பங்களின் நுகர்வு செலவு குறித்த தரவுகள் திரட்டப்பட்டன. 2022ம் ஆண்டு ஜூலை முதல், 2023 ஜூன் மாதம் வரை தரவுகள் திரட்டப்பட்டு, நடப்பாண்டு துவக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்த தரவுகளை ஆராய்ந்தபோது, உணவுப் பொருட்களில் மக்கள் செலவழிப்பது, கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதுவரை இல்லாத வகையில், முதல் முறையாக ஊரகப் பகுதிகளில் உள்ள குடும்பங்களின் நுகர்வில், உணவுக்கு செலவழிப்பது 50 சதவீதத்துக்கு கீழ் குறைந்து, 46 சதவீதமாக இருந்தது. இதுவே, நகர்ப்புறங்களில் 39 சதவீதமாக இருந்தது. இதையடுத்து, அடுத்தாண்டுக்குள் பணவீக்கத்தை கணக்கிடுவதில், உணவுப் பொருட்களின் பங்கு குறைக்கப்படும் என நிதியமைச்சக வட்டாரங்கள் அப்போதே தெரிவித்திருந்தன.

வட்டி விகிதம்


இந்நிலையில், தற்போது இது தொடர்பாக அரசு அமைத்துள்ள குழு, உணவுப் பிரிவின் பங்கை 8 சதவீதம் குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு நடக்கும்பட்சத்தில், வரும் காலங்களில் இந்தியாவின் நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான சில்லரை விலை பணவீக்கம் கணிசமாக குறையும்.

கடந்த ஜூன் மாதம் சில்லரை விலை பணவீக்கம் 5.08 சதவீதமாக இருந்த நிலையில், புதிய நடைமுறையின்படி இதை கணக்கிட்டால் 4.38 சதவீதமாகவே இருந்திருக்கும் என, 'புளூம்பெர்க்' நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்தே காணப்படுவதால், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை நிர்ணயிப்பதிலும் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே, ஓர் ஆண்டுக்கும் மேலாக வட்டி விகிதங்கள் குறைக்கப்படாமலேயே உள்ளன.

இந்நிலையில், அடுத்தாண்டுக்குள் சில்லரை விலை பணவீக்கத்தை கணக்கிடுவது, அதன் அடிப்படை ஆண்டு ஆகியவற்றில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என்றும், வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மாற்றியமைக்கப்பட உள்ள பணவீக்க குறியீட்டில், குதிரை சவாரி கட்டணம், வீடியோ கேசட் ரெக்கார்டர் மற்றும் ஆடியோ, வீடியோ கேசட்டுகள் ஆகியவற்றை நீக்கவும்; ஸ்மார்ட்போன் உள்ளிட்ட நுகர்வோர் மின்னணுவியல் பொருட்களை சேர்க்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அழுத்தம் கொடுப்பது நியாயமல்ல

பெரும்பாலும் வினியோக தொடர் சிக்கல்களாலேயே, உணவுப் பொருட்களின் விலை உயர்கிறது. இவ்வாறு இருக்கையில், பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் கொடுப்பது நியாயமல்ல. ஏனென்றால், மொத்த பணவீக்கத்தில் பெரும்பங்கு வகிக்கும் உணவுப் பிரிவின் கட்டுப்பாடு, ரிசர்வ் வங்கியின் கீழ் இல்லை. இதனாலேயே, சில்லரை விலை பணவீக்கத்தை கணக்கிடுவதில், உணவுப் பிரிவை தவிர்க்கக் கூறி, பொருளாதார ஆய்வறிக்கையில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.-- அனந்த நாகேஸ்வரன் தலைமை பொருளாதார ஆலோசகர்



கடந்த 10 ஆண்டுகளில், மக்கள் உணவுப் பொருட்களுக்காக செலவழிப்பது குறைந்துள்ளதால், அதன் பங்கை குறைக்க முடிவு








      Dinamalar
      Follow us