sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

'நாஸ்காம்' தலைவராக சிந்து கங்காதரன் நியமனம்

/

'நாஸ்காம்' தலைவராக சிந்து கங்காதரன் நியமனம்

'நாஸ்காம்' தலைவராக சிந்து கங்காதரன் நியமனம்

'நாஸ்காம்' தலைவராக சிந்து கங்காதரன் நியமனம்


ADDED : ஆக 27, 2024 03:10 AM

Google News

ADDED : ஆக 27, 2024 03:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி;'நாஸ்காம்' எனும் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கான தேசிய சங்கத்தின் தலைவராக சிந்து கங்காதரன் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக நாஸ்காம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த பன்னாட்டு மென்பொருள் நிறுவனமான 'சாப் லேப்ஸ்' நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வரும் சிந்து கங்காதரன், கடந்தாண்டு முதல், நாஸ்காமின் உலகளாவிய திறன் மையங்களுக்கு தலைவராக செயல்பட்டு வருகிறார்.

மேலும், 'சீமென்ஸ் இந்தியா, டைட்டன்' நிறுவனங்களின் இயக்குனர் குழு உறுப்பினராகவும்; இந்தியா - ஜெர்மனி வர்த்தக கூட்டமைப்பின் வழிநடத்தல் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

நாஸ்காம் தலைவராக நியமிக்கப்பட்ட பின் பேசிய சிந்து கங்காதரன், “புதிய கண்டுபிடிப்புகளில் உலகளவில் இந்தியா முன்னிலை வகிப்பதில், நாஸ்காம் முக்கிய பங்காற்றிஉள்ளது.

“வலுவான பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திறன்கள், கண்டுபிடிப்பு திறன்கள் மற்றும் டிஜிட்டல் திறன் கொண்ட அதிக இளைஞர்கள் உள்ளிட்டவற்றுடன், பெரிய அளவிலான டிஜிட்டல் மாற்றங்களை முன்னெடுப்பதற்கான சிறந்த நிலையில் இந்தியா தற்போது உள்ளது,” என தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us