ADDED : ஆக 14, 2024 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:'செபி' தலைவர் மாதவி புரி புச்சுக்கு தொடர்புடையதாக 'ஹிண்டன்பர்க்' அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பண்டு, மொரீஷியசை சேர்ந்தது அல்ல என்று, அந்நாட்டின் 'பைனான்சியல் சர்வீசஸ் கமிஷன்' தெரிவித்துள்ளது.'ஹிண்டன்பர்க் ரிசர்ச்' நிறுவனம், அதானி குழுமத்துக்கு தொடர்புடைய மொரீஷியசை சேர்ந்த பண்டு ஒன்றில், செபி தலைவர் புச் முதலீடு செய்திருந்ததாக குற்றஞ்சாட்டியிருந்தது.
இதற்கு, ''மொரீஷியசில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களை கண்காணிக்க, வலுவான கட்டமைப்புகள் உள்ளன. போலி நிறுவனங்கள் துவங்குவதை மொரீஷியஸ் அனுமதிப்பதில்லை,'' என எப்.எஸ்.சி. தெரிவித்துள்ளது.