ரூ.5 லட்சம் வரை யு.பி.ஐ.,யில் செலுத்தும் நடைமுறை அமல்: வரி, மருத்துவம், கல்வி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம்
ரூ.5 லட்சம் வரை யு.பி.ஐ.,யில் செலுத்தும் நடைமுறை அமல்: வரி, மருத்துவம், கல்வி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம்
ADDED : செப் 17, 2024 06:44 AM

புதுடில்லி: மின்னணு பணப் பரிவர்த்தனையின் முக்கிய வசதியான யு.பி.ஐ., வாயிலாக, இனி, 5 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தலாம். இந்த நடைமுறை நேற்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.
யு.பி.ஐ., தொழில்நுட்பத்தில், மின்னணு பணப் பரிவர்த்தனைகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. எனினும், ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்ச தொகையாக, 1 லட்சம் ரூபாய் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதை, 5 லட்சம் ரூபாயாக அதிகரித்து, என்.பி.சி.ஐ. அறிவித்தது.
இதையடுத்து, இனி யு.பி.ஐ., வாயிலாக, 5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி, மருத்துவமனை செலவுகள், கல்வி கட்டணம், புதிய பங்கு வெளியீட்டில் முதலீடு, ரிசர்வ் வங்கியின் சில்லரை முதலீட்டு திட்டங்கள் ஆகியவற்றில் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
அதிகரித்து வரும் யு.பி.ஐ., பணப் பரிவர்த்தனைகளை கருத்தில் கொண்டு, அதிக மதிப்பி லான பரிவர்த்தனைகளையும் அனுமதிக்க இந்த முடிவு வகை செய்கிறது.
எனினும், யு.பி.ஐ., பணப் பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு, வங்கிக்கு வங்கி மாறுபடுவதால், ஆன்லைன் வங்கி சேவை, மொபைல் வங்கி சேவை வாயிலாக, அவரவர் வங்கிக் கணக்கில் செலவழிப்பு உச்சவரம்பை அதிகரித்து மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். இது தொடர்பாக, வங்கிகளுக்கு என்.பி.சி.ஐ., அறிவுறுத்தியுள்ளது.
அதிக மதிப்பிலான ரொக்கப் புழக்கத்தை குறைக்கும் வகையில், மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.