sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

மருத்துவ காப்பீடு தேவை 38 சதவீதம் அதிகரிப்பு ஜி.எஸ்.டி., ரத்து காரணம்

/

மருத்துவ காப்பீடு தேவை 38 சதவீதம் அதிகரிப்பு ஜி.எஸ்.டி., ரத்து காரணம்

மருத்துவ காப்பீடு தேவை 38 சதவீதம் அதிகரிப்பு ஜி.எஸ்.டி., ரத்து காரணம்

மருத்துவ காப்பீடு தேவை 38 சதவீதம் அதிகரிப்பு ஜி.எஸ்.டி., ரத்து காரணம்


ADDED : நவ 01, 2025 02:47 AM

Google News

ADDED : நவ 01, 2025 02:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கான ஜி.எஸ்.டி.,யை மத்திய அரசு முற்றிலுமாக நீக்கியதையடுத்து, இவற்றின் தேவை 38 சதவீதம் அதிகரித்துள்ளதாக, 'பாலிசிபஜார்' நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.

மத்திய அரசு தனிநபர் மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கான ஜி.எஸ்.டி.,யை, 18 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாக குறைத்தது. கடந்த செப்., 22ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வந்தது.

இதனால், அதிக மதிப்பு கொண்ட மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்கான தேவை 38 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஜி.எஸ்.டி., விலக்குக்கு பின், வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச பாதுகாப்பை விட முழுமையான பாதுகாப்பை விரும்புவதால், சராசரி காப்பீடு தொகை, 13 லட்சத்தில் இருந்து 18 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

மொத்தத்தில், 45 சதவீத வாடிக்கையாளர்கள் 15 - 25 லட்சம் ரூபாய் வரம்புக்குள் காப்பீடுகளை தேர்வு செய்கின்றனர்.

மாநகரங்கள் மட்டுமல்லாது இரண்டாம் கட்ட நகரங்களிலும், குறைந்த மதிப்பு காப்பீடுகளின் மீதான விருப்பம் குறைந்து, 15 - 25 லட்சம் ரூபாய் காப்பீடுகளை தேர்வு செய்பவர்களின் பங்கு 48.60 சதவீதமாக அதிகரித்துள்ளது. 61 - 75 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் அதிக மதிப்பிலான காப்பீடுகளை தேர்ந்தெடுப்பது 11.54 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இருக்கும் நோய், தீவிர நோய் பாதுகாப்பு போன்ற துணை பயன்களுக்கான காப்பீடு தேவையும் உயர்ந்துள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us