sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

நவீனமயமாக்க ரூ.10,000 கோடி நிதி திரட்டுகிறது ஏர் இந்தியா

/

நவீனமயமாக்க ரூ.10,000 கோடி நிதி திரட்டுகிறது ஏர் இந்தியா

நவீனமயமாக்க ரூ.10,000 கோடி நிதி திரட்டுகிறது ஏர் இந்தியா

நவீனமயமாக்க ரூ.10,000 கோடி நிதி திரட்டுகிறது ஏர் இந்தியா


ADDED : நவ 01, 2025 02:48 AM

Google News

ADDED : நவ 01, 2025 02:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவதோடு, நவீனமயமாக்கலுக்கு 10,000 கோடி ரூபாய் நிதி தேவை என டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ல் அரசிடம் இருந்து, ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் கையகப்படுத்தியது. ஏர் இந்தியாவின் 74.90 சதவீத பங்குகள் டாடா குழுமம் வசமும், மீதமுள்ள பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வசமும் உள்ளன.

இந்நிலையில், கடந்த ஜூனில் குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், பயணிகள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர்.

இதனால், ஏர் இந்தியா மோசமான நெருக்கடி நிலையில் தவித்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் தன் சேவையை வழக்கம் போல் தொடர்வதற்கு, நவீனமயமாக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஏர் இந்தியா தள்ளப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, அமைப்பு ரீதியாக மற்றும் பொறியியல், பராமரிப்பு பிரிவுகளை மேம்படுத்த, டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸிடம் 10,000 கோடி ரூபாய் ஏர் இந்தியா நிதி கோரியுள்ளது.

இதனை, வட்டியில்லா கடன் அல்லது பங்குகள் வாயிலாக திரட்டுவதா என்பதை உரிமையாளர்கள் முடிவு செய்து கொள்ளுமாறு கேட்டுகொண்டு உள்ளதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us