ADDED : செப் 07, 2025 07:00 PM

கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் லேசான சரிவுடனும், நிப்டி லேசான ஏறுமுகத்துடனும் முடிந்தன. வார இறுதி வர்த்தக நிறைவில், ஏற்ற இறக்கமான வர்த்தகத்திற்கு பிறகு மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 7 புள்ளிகள் குறைந்து, 80,711 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 7 புள்ளிகள் உயர்ந்து, 24,741 புள்ளியாக இருந்தது.
சந்தை மீட்சியின் எதிர்பார்ப்பால், ஆட்டோ துறை பங்குகள் ஏறுமுகம் கண்டன. ஐ.டி., மற்றும் நுகர்வோர் துறை பங்குகள் இறங்குமுகம் கண்டன. வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர்.
-
ஏறுமுகம் கண்ட பங்குகள்
1. எம் & எம்.,- 3,561.55 (2.34)
2. மாருதி சுசூகி- 14,904.50 (1.70)
3. பவர்கிரிட்கார்ப்- 285.40 (1.21)
-
இறங்குமுகம் கண்ட பங்குகள்
1. ஐ.டி.சி.,- 407.50 (2.01)
2. எச்.சி.எல் டெக்- 1,420.75 (1.55)
3. டெக் மகிந்திரா- 1,479.40 (1.43)