ADDED : நவ 05, 2025 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், வங்கிகளின் தனிநபர் கடன் பிரிவில், முதல்முறையாக தங்க நகைக்கடன் வினியோகம், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது.
தங்கம் விலை ஒருபுறம் உயர்ந்து கொண்டே போக, மறுபுறம் வங்கிகளில் தங்க நகையை அடமானமாக வைத்து கடன் வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், வங்கிகளில் பெற்ற நகைக்கடன்கள் 51 சதவீதம் அதிகரித்து, 1,07,307 கோடி ரூபாயாகின.
கடந்தாண்டின் இதே காலத்தில் வழங்கப்பட்ட 44,519 கோடி ரூபாய் நகைக்கடனோடு ஒப்பிடுகையில், இந்தாண்டு 43 சதவீதம் அதிகம்.

