sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

வர்த்தக துளிகள்:ரூ.115 கோடி திரட்டிய சென்னை நிறுவனம்

/

வர்த்தக துளிகள்:ரூ.115 கோடி திரட்டிய சென்னை நிறுவனம்

வர்த்தக துளிகள்:ரூ.115 கோடி திரட்டிய சென்னை நிறுவனம்

வர்த்தக துளிகள்:ரூ.115 கோடி திரட்டிய சென்னை நிறுவனம்


ADDED : செப் 19, 2024 02:48 AM

Google News

ADDED : செப் 19, 2024 02:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வருமான வரி மேல் முறையீடு தொகை உயர்த்தி அறிவிப்பு



புதுடில்லி:வருமான வரி கேட்பு பிரச்னைகளில், தீர்ப்பாயம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் நேரடி வரிகள் வாரியம் மேல்முறையீடு செய்வதற்கான குறைந்தபட்ச தொகை வரம்பை, வருமான வரித் துறை உயர்த்தியுள்ளது.

தீர்ப்பாயம் செல்ல 50 லட்சம் ரூபாயாக இருந்த குறைந்தபட்ச தொகை, 60 லட்சம் ரூபாயாகிறது. உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு, ஒரு கோடி ரூபாயாக இருந்த வரம்பு, 2 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான தொகை 2 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டி.டி.எஸ்., டி.சி.எஸ்., உட்பட, அனைத்து வருமான வரி தாவாக்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என, வருமான வரித் துறை அறிவித்துள்ளது.

ரூ.115 கோடி திரட்டிய சென்னை நிறுவனம்



சென்னை:சென்னையைச் சேர்ந்த நிதி தொழில்நுட்ப நிறுவனமான 'கலைடோபின்', 115 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

டென்மார்க் நிறுவனமான 'ரபோ பார்ட்னர்ஷிப்' நிறுவனம், கலைடோபின் நிறுவனத்தில் 92 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில், ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து மீதி தொகை திரட்டப்பட்டுள்ளது.

கடந்த, 2022ஆம் ஆண்டில், 'பில் அண்டு மெலிண்டா பவுண்டேஷன்' உட்பட சில அறக்கட்டளைகள், தனியார் நிறுவனங்கள், கலைடோபின் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 193 கோடி ரூபாயை முதலீடு செய்தன. அவற்றையும் சேர்த்து, இந்நிறுவனம் கிட்டத்தட்ட 310 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.






      Dinamalar
      Follow us