sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 04, 2025 ,ஆவணி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ஐ.ஆர்.இ.டி.ஏ., கடன் பத்திரங்களுக்கு வரி விலக்கு வழங்கியது மத்திய அரசு

/

ஐ.ஆர்.இ.டி.ஏ., கடன் பத்திரங்களுக்கு வரி விலக்கு வழங்கியது மத்திய அரசு

ஐ.ஆர்.இ.டி.ஏ., கடன் பத்திரங்களுக்கு வரி விலக்கு வழங்கியது மத்திய அரசு

ஐ.ஆர்.இ.டி.ஏ., கடன் பத்திரங்களுக்கு வரி விலக்கு வழங்கியது மத்திய அரசு


UPDATED : ஜூலை 11, 2025 12:25 AM

ADDED : ஜூலை 11, 2025 12:14 AM

Google News

UPDATED : ஜூலை 11, 2025 12:25 AM ADDED : ஜூலை 11, 2025 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த ஐ.ஆர்.இ.டி.ஏ., எனும் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் வெளியிடும் கடன் பத்திரங்களுக்கு, மத்திய அரசு வரி விலக்கு அறிவித்துள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு குறைந்த செலவில் நிதி திரட்ட ஏதுவாக, முதலீட்டாளர்களின் மூலதன ஆதாயம் மீதான வரியில் இருந்து விலக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. வருமான வரி சட்டம் 1961, பிரிவு 54 இ.சி.,யின் கீழ் இந்த விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நடைமுறை கடந்த 9ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிக்கையை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ.ஆர்.இ.டி.ஏ.,வால் வெளியிடப்படும் கடன் பத்திரங்கள், நீண்ட கால சொத்துக்கள் என அதில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, ஐந்தாண்டுகள் கழித்து புதுப்பித்துக் கொள்ளும் வகையிலான ஐ.ஆர்.இ.டி.ஏ., கடன் பத்திரங்களுக்கும், ஜூன் 9ம் தேதி முதல் வெளியிடப்பட உள்ள பத்திரங்களுக்கும் வரி விலக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுமை எரிசக்தி துறையில் முதலீட்டை ஈர்க்கும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பின்னணி

* கடந்த 2021 காலநிலை மாநாட்டில், இந்தியா ஐந்து உறுதிமொழிகளை அறிவித்தது

* 2030க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைவது

* எரிசக்தி தேவையில் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இருந்து பெறுவது

* 100 கோடி டன் கார்பன் உமிழ்வை குறைப்பது

* ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், கார்பன் உமிழ்வை 45 சதவீதம் குறைப்பது

* 2070க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்ற இலக்கை அடைவது.

என்ன லாபம்


முதலீட்டாளர்களை பொறுத்தவரை நிலம், வீடு போன்ற நீண்ட கால சொத்துக்கள் விற்பனையில் ஈட்டிய லாபத்தை, ஐ.ஆர்.இ.டி.ஏ.,வின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதன் வாயிலாக வரி விலக்கு பெறலாம். நீண்ட கால மூலதன ஆதாய வரியாக 20 சதவீதம் வசூலிக்கப் பட்டு வரும் நிலையில், இந்த தொகையை சேமிக்கலாம். ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக இந்த கடன் பத்திரங்களில், 50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து வரி விலக்கு பெற முடியும். ஐ.ஆர்.இ.டி.ஏ., குறைவான செலவில் அதிக முதலீடுகளை திரட்ட இது வழி வகுக்கும். எந்த ஒரு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம், அதன் வருவாயை கொண்டே கடனை திருப்பிச் செலுத்தக் கூடிய திறன் பெறத்தக்கதாக இருக்கிறதோ, அதற்கு மட்டுமே இவ்வாறு திரட்டப்படும் தொகையை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us