sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

3 முக்கிய துறைகளின் ஏற்றுமதி முதல் காலாண்டில் வளர்ச்சி

/

3 முக்கிய துறைகளின் ஏற்றுமதி முதல் காலாண்டில் வளர்ச்சி

3 முக்கிய துறைகளின் ஏற்றுமதி முதல் காலாண்டில் வளர்ச்சி

3 முக்கிய துறைகளின் ஏற்றுமதி முதல் காலாண்டில் வளர்ச்சி


UPDATED : ஜூலை 21, 2025 07:25 AM

ADDED : ஜூலை 21, 2025 12:53 AM

Google News

UPDATED : ஜூலை 21, 2025 07:25 AM ADDED : ஜூலை 21, 2025 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் முக்கிய மூன்று துறைகளான மின்னணு, ஆயத்த ஆடைகள் மற்றும் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.



நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்., - ஜூன் காலகட்டத்தில், மின்னணு துறை ஏற்றுமதி 47 சதவீதம் அதிகரித்து, 1.05 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மின்னணு பொருட்கள் ஏற்றுமதிக்கான முதல் மூன்று இடங்களில் அமெரிக்கா, யு.ஏ.இ., மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன. இதனைத் தொடர்ந்து நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி உள்ளன.





இதேபோன்று, ஆயத்த ஆடை ஏற்றுமதியும் கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இருந்த 32,725 கோடி ரூபாயைக்காட்டிலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 35,615 கோடி ரூபாயாக வளர்ச்சியடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, கடல்சார் பொருட்கள் ஏற்றுமதியும் முதல் காலாண்டில் 19.45 சதவீதம் அதிகரித்து, 16,575 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த மூன்று துறைகளிலும் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி நாடாக அமெரிக்கா தொடர்ந்து முன்னணியில் உள்ளது. இதன் வாயிலாக, அமெரிக்கா இந்தியாவின் மிக முக்கிய வர்த்தக நாடாக உள்ளதை பிரதிபலிப்பதாக உள்ளது.










      Dinamalar
      Follow us