sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

நீரேற்று மின் திட்டத்தை செயல்படுத்த தனியாருக்கு முதல்முறையாக அழைப்பு

/

நீரேற்று மின் திட்டத்தை செயல்படுத்த தனியாருக்கு முதல்முறையாக அழைப்பு

நீரேற்று மின் திட்டத்தை செயல்படுத்த தனியாருக்கு முதல்முறையாக அழைப்பு

நீரேற்று மின் திட்டத்தை செயல்படுத்த தனியாருக்கு முதல்முறையாக அழைப்பு


ADDED : ஜன 31, 2025 12:20 AM

Google News

ADDED : ஜன 31, 2025 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் முதல்முறையாக சுயமாக இடத்தை அடையாளம் கண்டு, அங்கு நீரேற்று மின் திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் உள்ள நிறுவனங்களுக்கு, பசுமை எரிசக்தி கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி கூறியதாவது:

நீரேற்று மின் திட்டத்திற்கு மேல் அணை, கீழ் அணை இருக்க வேண்டும். மேல் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, மின் உற்பத்திக்கு பயன்படுத்திய பின், கீழ் அணைக்கு வரும். இந்த தண்ணீர், அதிக திறன் உடைய மோட்டார் பம்ப் வாயிலாக மேல் அணைக்கு எடுத்து செல்லப்படும்.

தற்போது, முழுதுமாக நீரேற்று மின் திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் உள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மின் திட்டத்தை அமைக்கும் போது, ஆறுகளை மாசுபடுத்தக் கூடாது என்ற நிபந்தனை உள்ளது.

எனவே, தனியார் முயற்சியில் நீரேற்று மின் திட்டம் அமைய உள்ள இடத்தில் ஆறு இருக்கக் கூடாது. திருநெல்வேலி போன்ற இடங்களில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நீர் வீழ்ச்சி கொட்டுகிறது.

அதற்கு ஏற்ப, நீரேற்று மின் திட்டத்தை செயல்படுத்தும் இடத்தை தனியார் நிறுவனமே சுயமாக தேர்வு செய்ய வேண்டும். வனத்துறை, அரசிடம் இடமிருந்தால் அதற்கு நிறுவனம் அணுகினால், குத்தகைக்கு வழங்க வழி வகை செய்யப்படும்.

தனியார் இடத்தையும் குத்தகைக்கு எடுக்கலாம். இடத்தை தேர்வு செய்த பின், மின் திட்டத்திற்கு பசுமை எரிசக்தி கழகத்திடம் அனுமதி பெற வேண்டும்.

அனுமதி வழங்கப்பட்ட நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள், மின் நிலைய கட்டுமான பணியை துவக்க வேண்டும். ஏழு ஆண்டுகளுக்குள் கட்டுமான பணியை முடிக்க வேண்டும். அனைத்து அனுமதிகளும் ஒற்றை சாளர முறையில் அனுமதி, பத்திரப்பதிவு கட்டணத்தில் 50 சதவீதம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

* மின் நிலையம் அமைக்க மெகா வாட்டிற்கு, 'பெசிலிடேஷன்' கட்டணம் ரூ.20,000

* 1,000 லிட்டர் தண்ணீருக்கு, 1.50 ரூபாய் செலுத்த வேண்டும்

* திட்டத்திற்கான மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்து வாங்கினால், யூனிட்டிற்கு கட்டணம் 25 காசு

* உற்பத்தி செய்த மின்சாரத்தை தமிழகத்தில் எடுத்து செல்ல, யூனிட்டிற்கு கட்டணம் 50 காசு.

எப்படி செயல்படுகிறது?


1. குறைந்த தேவை உள்ளபோது, கீழணையில் இருந்து மேலணைக்கு சோலார் (அ) காற்றாலை மின்சாரத்தில் மோட்டார் வாயிலாக நீரேற்றப்படும்
2. தேவை அதிகரிக்கும்போது மேலணையில் இருந்து கீழணைக்கு நீர் செலுத்தப்படும்
3. குழாய் வழியாக நீர் பாயும்போது, டர்பைனில் மின்சாரம் உற்பத்தியாகும்
4. உருவாகும் மின்சாரம் ஜெனரேட்டர் நிலையத்தின் வாயிலாக, சோலார் (அ) காற்றாலை மின்சாரத்துடன் சேர்க்கப்படும்.
மேலணை
ஜெனரேட்டர் நிலையம் டர்பைன்/மோட்டார்கீழணை








      Dinamalar
      Follow us