sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

'சிறு, நடுத்தர முதலீட்டு பிரிவில் மோசடியாக விலை ஏற்ற இறக்கம்'

/

'சிறு, நடுத்தர முதலீட்டு பிரிவில் மோசடியாக விலை ஏற்ற இறக்கம்'

'சிறு, நடுத்தர முதலீட்டு பிரிவில் மோசடியாக விலை ஏற்ற இறக்கம்'

'சிறு, நடுத்தர முதலீட்டு பிரிவில் மோசடியாக விலை ஏற்ற இறக்கம்'


ADDED : மார் 12, 2024 06:55 AM

Google News

ADDED : மார் 12, 2024 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை : சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் முதலீட்டு பிரிவில், மோசடியாக விலை ஏற்ற இறக்கங்கள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக, 'செபி' தலைவர் மாதபி புரி புச் தெரிவித்துள்ளார்.

புதிய பங்கு வெளியீடு மற்றும் வர்த்தகம் ஆகிய இரண்டிலும் இந்த மோசடி விலை ஏற்ற இறக்கம் நடைபெறுவதாகவும், முதலீட்டாளர்கள் இது தொடர்பாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: சிறு மற்றும் நடுத்தர முதலீட்டு பிரிவில், மோசடியான விலை ஏற்ற இறக்கங்களுக்கான அறிகுறிகளை செபி கண்டறிந்துள்ளது; அதற்கான தொழில்நுட்பம் எங்களிடம் உள்ளது. எனினும், இவை எல்லாம் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறதே தவிர, நிலைமை இன்னும் கை மீறி போய்விடவில்லை.

இது தொடர்பான முழு தகவல்களையும் அறிய மற்றும் தரவுகளை ஆராய, செபி பல்வேறு ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், அது தொடர்பாக அடுத்த நாளே பொது ஆலோசனை நடத்தப்படும்.

முதலீட்டாளர்கள், பங்குச் சந்தை முதலீட்டிலிருந்து, சிறு மற்றும் நடுத்தர பிரிவு பண்டு முதலீடு மாறுபட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதுபோல அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தகவல்கள் தொடர்பான விதிகளும் மாறுபடும்.

இப்பிரிவை நிர்வகிக்கும் விதிமுறைகள், வழங்கப்பட வேண்டிய தகவல்கள், 'ரிஸ்க்' தன்மை அனைத்துமே பங்குச் சந்தை முதலீட்டிலிருந்து வேறுபட்டவை.

சிறு மற்றும் நடுத்தர பிரிவு முதலீட்டில் ஈடுபட்டு வரும் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், வரும் மார்ச் 15ம் தேதி முதல், 'ஸ்ட்ரெஸ் டெஸ்டிங் டேட்டா' குறித்த தகவல்களை அவர்களது இணையதளத்தில் வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது, அசாதாரண சுழல் ஏற்படும்போது, பண்டு நிறுவனங்கள் தங்களது முதலீட்டை எவ்வளவு காலத்துக்குள் மீட்டெடுப்பர் என்பதை முதலீட்டாளர்கள் கண்டறிய உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடனடி செட்டில்மென்ட்

பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மேற்கொண்ட அதே நாளிலேயே பணத்தை பெறுவதற்கான செட்டில்மென்ட் முறை, வரும் 28ம் தேதி முதல், விருப்ப அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக செபி தலைவர் மாதபி புரி புச் தெரிவித்துள்ளார். தற்போதைய நடைமுறையில் வர்த்தகம் மேற்கொண்ட அடுத்த நாள் தான் பணத்தை பெற முடியும். நாட்டின் பங்குச் சந்தைகளை போட்டித் தன்மை நிறைந்ததாக மாற்றும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.








      Dinamalar
      Follow us