sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ஆயுள் காப்பீடு பாதுகாப்பு அதிகரிப்பு

/

ஆயுள் காப்பீடு பாதுகாப்பு அதிகரிப்பு

ஆயுள் காப்பீடு பாதுகாப்பு அதிகரிப்பு

ஆயுள் காப்பீடு பாதுகாப்பு அதிகரிப்பு


ADDED : பிப் 18, 2024 11:53 PM

Google News

ADDED : பிப் 18, 2024 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நகர்ப்புற இந்தியர்களில் பெரும்பாலானோர் ஆயுள் காப்பீடு பாலிசி பெற்றிருப்பதும், காப்பீடு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

'மேக்ஸ் லைப்' காப்பீடு நிறுவனம் இந்தியர்கள் மத்தியில் காப்பீடு தொடர்பான ஆய்வு நடத்தி, காப்பீடு பாது காப்பு விகித அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு, 25 நகரங்களில் உள்ள 4,700 பேருக்கு மேற்பட்டோரிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்படி, காப்பீடு பாதுகாப்பு அட்டவணை 45 ஆக உயர்ந்துள்ளது.

காப்பீடு விழிப்புணர்வு அட்டவணை 61 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நகர்ப்புற இந்தியர்களில் நான்கில் மூன்று பேர் ஆயுள் காப்பீடு பாலிசி பெற்றுள்ளனர். பணிபுரியும் பெண்களில் பத்தில் எட்டு பேர் ஆயுள் காப்பீடு பெற்றுள்ளனர். பணியில் இருக்கும் பெண்கள் மத்தியில் காப்பீடு பாதுகாப்பும் அதிகரித்துள்ளது.

எனினும், இரண்டாம் அடுக்கு மற்றும் சிறிய நகரங்களில் காப்பீடு பெறுவது குறைவாக உள்ளது. இந்திய அளவில் தென் மாநிலம், காப்பீடு பாதுகாப்பில் முன்னிலை பெற்றுள்ளது. இளம் தலைமுறையினரிடையே காப்பீடு பாதுகாப்பு குறைவாக உள்ளது. இந்த பிரிவினர் தான் மிகக் குறைந்த பாதுகாப்பு கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us