sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி டில்லியில் நாளை துவங்குகிறது

/

 இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி டில்லியில் நாளை துவங்குகிறது

 இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி டில்லியில் நாளை துவங்குகிறது

 இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி டில்லியில் நாளை துவங்குகிறது


ADDED : நவ 12, 2025 11:19 PM

Google News

ADDED : நவ 12, 2025 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்திய சர்வதேச வர்த்த கண்காட்சி-2025, டில்லியில் நாளை முதல் 27ம் தேதி வரை இரு வாரங்கள் நடக்கிறது.

இந்திய தொழில் மேம்பாட்டு அமைப்பான, ஐ.டி.பி.ஓ., ஆண்டு தோறும் இக்கண்காட்சியை நடத்தி வருகிறது.

டில்லி பாரத் மண்டபத்தில் 44 ஆவது கண்காட்சி, நடக்க இருக்கிறது.

உள்நாட்டு, வெளிநாட்டு அரங்குகளில் எண்ணற்ற கலை, கைவினை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும்.

பீகார், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகளின் ஆதரவுடன் இவ்வாண்டு கண்காட்சி நடத்தப்படுகிறது.

அங்கு ஒவ்வொரு மாநிலம் குறித்த சிறப்பு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மேலும் ஏ.ஐ., தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, டீப்டெக், வேளாண்மை முதலிய பல்வேறு துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை பறைசாற்றும் வகையில் அரங்குகள் இடம்பெறும்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஸ்டால்கள் அமைக்கும் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கண்காட்சியில், யு.ஏ.இ., சீனா, ஈரான், தென்கொரியா, எகிப்து உட்பட 12 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் அரங்குகளும் இடம்பெறுகின்றன.

காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிவரை இக்கண்காட்சியைப் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி உண்டு என்று இந்திய தொழில் மேம் பாட்டு அமைப்பு தெரிவித்து ள்ளது.






      Dinamalar
      Follow us