sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

'புதிய துறைமுகங்கள் சட்டம் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவும்'; மத்திய நீர்வழி போக்குவரத்து துறை செயலர்

/

'புதிய துறைமுகங்கள் சட்டம் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவும்'; மத்திய நீர்வழி போக்குவரத்து துறை செயலர்

'புதிய துறைமுகங்கள் சட்டம் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவும்'; மத்திய நீர்வழி போக்குவரத்து துறை செயலர்

'புதிய துறைமுகங்கள் சட்டம் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவும்'; மத்திய நீர்வழி போக்குவரத்து துறை செயலர்


UPDATED : ஆக 23, 2025 01:16 PM

ADDED : ஆக 23, 2025 12:49 AM

Google News

UPDATED : ஆக 23, 2025 01:16 PM ADDED : ஆக 23, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :'ஒரே தொழில் கொள்கை, கட்டண முறை மற்றும் முதலீட்டை அதிகரிப்பதற்கான அம்சங்கள் இடம்பெற்றுள்ள துறை முகங்கள் குறித்த புதிய சட்டத்தால், இந்திய துறைமுகங்கள் அடுத்தகட்ட வளர்ச்சி அடையும்' என மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை செயலர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் துறைமுகங்களை நவீனமாக்கி, ஏற்றுமதியை அதிகரிக்க கவனம் செலுத்தி வரும் மத்திய அரசு, 1908ம் ஆண்டு இயற்றப்பட்ட பழைய இந்திய துறைமுகங்கள் சட்டத்தை மாற்றி, 'புதிய இந்திய துறைமுகங்கள் சட்டம் 2025' கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து, மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை செயலர் ராமச்சந்திரன், நமது நாளிதழுக்கு அளித்த பேட்டி:

இந்திய துறைமுக புதிய சட்டத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள், உலகத் தரத்துக்கு துறைமுகங்களை கொண்டு செல்வது, முதலீட்டை ஈர்ப்பது, வேலைவாய்ப்பை அதிகரிப்பது என்பதை நோக்கமாக கொண்டதாக இருக்கும். இந்திய துறைமுகங்களில் நிர்வாகத்தை மாற்றியமைப்பதோடு, மத்திய - - மாநில ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, வர்த்தக வளர்ச்சி உறுதிப்படுத்தப்படும்.

ஏற்றுமதியாளர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு எளிய நடைமுறைகள், மேம்பட்ட உள்கட்டமைப்பு ஆகியவற்றில் பயன் கிடைக்கும். இதுபோன்ற புதிய நடவடிக்கைகளால், இந்திய துறைமுகங்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

துறைமுகங்கள் நிர்வாகத்தில் மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என, இந்திய நீர்வழி போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலர் நரேந்திர ராவ் கூறினார். புதிய துறைமுக மசோதா லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு, கடந்த 18ம் தேதி, மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, இந்த புதிய மசோதாவுக்கு, ஆக., 21ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்த நிலையில், அது சட்டமாகியுள்ளது.
* நாட்டில் 12 பெரிய துறைமுகங்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட துறைமுகங்கள் உள்ளன
* 2014ல் இந்திய துறைமுகங்கள் கையாண்ட சரக்குகள், ஆண்டுக்கு 12,000 லட்சம் டன்
* 2025ல் மொத்த சரக்குகள் கையாளல் 26,000 லட்சம் டன் ஆக அதிகரிப்பு
* 2030ல் வல்லரசு நாடுகளுக்கு இணையாக, இந்திய கடல்சார் துறையை உருவாக்க மத்திய அரசு திட்டம்.








      Dinamalar
      Follow us