பருப்பு ரகங்கள் இறக்குமதி 2025-ல் 4.50 சதவிகிதம் குறைந்தது
பருப்பு ரகங்கள் இறக்குமதி 2025-ல் 4.50 சதவிகிதம் குறைந்தது
ADDED : பிப் 25, 2026 02:04 AM

புதுடில்லி: கடந்த 2025ல் பருப்பு ரகங்கள் இறக்குமதி 4.50 சதவிகிதமாக குறைந்துள்ளதாக இந்திய பருப்பு மற்றும் தானியங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: முந்தைய ஆண்டில் 68.75 லட்சம் டன்னாக இருந்த பருப்பு ரகங்கள் இறக்குமதி கடந்தாண்டில் 65.69 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. குறிப்பிட்ட பருப்பு ரகங்களின் இறக்குமதி கணிசமாக குறைந்ததே இதற்கு காரணம்.
குறிப்பாக மஞ்சள் பட்டாணி இறக்குமதி அதிகபட்சமாக 56 சதவிகிதம் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டில் 29.39 லட்சம் டன் இறக்குமதியான நிலையில் 2025ல் 12.90 லட்சம் டன்னாக குறைந்தது. மஞ்சள் பட்டாணி இறக்குமதிக்கு 30 சதவிகித வரி விதிக்கப்பட்டதே இதற்கு காரணம்.
சென்னா இறக்குமதி, கடந்தாண்டில் 301 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. முந்தைய ஆண்டில் 3.94 லட்சம் டன்னாக இருந்த சென்னா இறக்குமதி, கடந்தாண்டில் 15.81 லட்சம் டன்னாக உயர்துள்ளது.
ஆஸ்திரேலியா 14.23 லடசம் டன் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் தான்சானியா , மியான்மர் ஆகிய நாடுகள உள்ளன.
கடந்தாண்டில் கருப்பு உளுந்து வினியோ பற்றாக்குறை இருந்ததால் அதன் இறக்குமதி 41 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மியான்மர் 8.09 லட்சம் டன் உளுந்தை ஏற்றுமதி செய்து முதல் இடத்தில் உள்ளது. பிரேசில் 2.37 லட்சம் டன் உளுந்தை ஏற்றுமதி செய்து அடுத்த இடத்தில் உள்ளது.

