
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்கு சந்தை கடந்த வாரம் இறங்கு முகத்துடன் முடிந்தது. தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவு கண்ட நிலையில், வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 271 புள்ளிகள் குறைந்து, 79,810 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 74 புள்ளிகள் குறைந்து, 24,427 புள்ளிகளாக இருந்தது.
இந்திய ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி விதிப்பு பொருளாதார நோக்கில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பான அச்சம், முதலீட்டாளர்களை எச்சரிக்கையான
அணுகுமுறையை பின்பற்ற வைத்தது. வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர்.