sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

தமிழக மின்கட்டமைப்பு நவீனமயம் மத்திய அரசு ஒப்புதல் தர வலியுறுத்தல்

/

தமிழக மின்கட்டமைப்பு நவீனமயம் மத்திய அரசு ஒப்புதல் தர வலியுறுத்தல்

தமிழக மின்கட்டமைப்பு நவீனமயம் மத்திய அரசு ஒப்புதல் தர வலியுறுத்தல்

தமிழக மின்கட்டமைப்பு நவீனமயம் மத்திய அரசு ஒப்புதல் தர வலியுறுத்தல்


ADDED : நவ 13, 2024 12:43 AM

Google News

ADDED : நவ 13, 2024 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக கடல் பகுதியில், 35,000 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க இயலும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த மின்சாரத்தை எடுத்து வரும் வழித்தடங்கள், தமிழகத்துக்குள் மட்டுமே அமைக்கப்பட வேண்டும் என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

மத்திய மின்சார அமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில், அனைத்து மாநில மின் துறை அமைச்சர்கள் மாநாடு, டில்லியில் நேற்று நடந்தது.

இதில், அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:

மத்திய அரசின் நிதி நிறுவனங்களான, 'ரூரல் எலக்ட்ரிபிகேஷன், பவர் பைனான்ஸ்' நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்பட்ட கடனுக்கான வட்டியை, 8 சதவீதமாக குறைக்க வேண்டும்.

தமிழக மின் கட்டமைப்பு நவீனமயமாக்கலுக்கு, 3,246 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட கருத்துரு, மத்திய மின் துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

வரும், 2029 - 30க்குள் 75,300 மெகா வாட் மின்சாரம், பசுமை ஹைட்ரஜன், பசுமை அம்மோனியா தொழில் துறையில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட உள்ளது.

மத்திய மின் பரிமாற்ற பயன்பாட்டு நிறுவனம், மாநில மின் வினியோக நிறுவனங்களின் ஒப்புதல் இல்லாமல், அந்த உற்பத்தியாளர்களுக்கு நேரடியாக மத்திய மின் வழித்தடத்தில் இணைக்க அனுமதி வழங்கி வருகிறது.

எனவே, மின்சார சட்ட விதிகளின் படி, உற்பத்தியாளர்களுக்கான மின் பரிமாற்ற கட்டண விலக்கு திரும்ப பெறப்பட வேண்டும்.

தமிழக கடல் பகுதியில், 35,000 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க இயலும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த மின்சாரத்தை எடுத்து வரும் வழித்தடங்கள் தமிழகத்துக்குள் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

சுமை ஏற்படுவது எப்படி?

பசுமை ஹைட்ரஜன், பசுமை அம்மோனியா திட்டங்களுக்கு காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் பயன்படுத்தப்படும். எனவே, அத்திட்டங்களுடன், கடலில் காற்றாலை மின் நிலையம் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு, மின் வழித்தட கட்டணம் செலுத்துவதில் இருந்து, 25 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வழித்தட செலவை, அனைத்து மாநில மின் வாரியங்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதால், கூடுதல் சுமை உருவாகும்.








      Dinamalar
      Follow us