அமித் ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்த டாடா குழும நிர்வாகிகள்
அமித் ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்த டாடா குழும நிர்வாகிகள்
ADDED : அக் 08, 2025 12:37 AM

புதுடில்லி:டாடா குழுமத்துக்குள் நிலவும் உட்பூசல்கள் தணிக்க, மத்திய அரசு தலையிட உள்ளதாக நேற்று முன்தினம் தகவல் வெளியான நிலையில், டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா, துணை தலைவர் வேணு சீனிவாசன், டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் நேற்றிரவு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தனர்.
டாடா குழுமத்தின் முக்கிய பங்குதாரரான டாடா டிரஸ்ட்சுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது, டாடா குழும நிறுவனங்களின் செயல்பாட்டை பாதிக்கலாம் என்பதால், இக்குழுமத்தின் தலைவர்களை மத்திய அமைச்சர்கள் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு சிக்கல் வராமல் தடுக்க, டாடா டிரஸ்ட்சில் உள்ள அறங்காவலர்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை சரிசெய்வதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது. இந்நிலையில், அமித் ஷா இல்லத்தில் இந்த முக்கிய சந்திப்பு நடைபெற்றது.