sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

செய்திகளில் கவனம் வைப்பதே சிறந்த 'ஸ்ட்ராட்டஜி'யாக இருக்கும்

/

செய்திகளில் கவனம் வைப்பதே சிறந்த 'ஸ்ட்ராட்டஜி'யாக இருக்கும்

செய்திகளில் கவனம் வைப்பதே சிறந்த 'ஸ்ட்ராட்டஜி'யாக இருக்கும்

செய்திகளில் கவனம் வைப்பதே சிறந்த 'ஸ்ட்ராட்டஜி'யாக இருக்கும்


ADDED : டிச 08, 2024 12:31 AM

Google News

ADDED : டிச 08, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த வாரம்


 நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், எதிர்பார்ப்பை விட வளர்ச்சி குறைந்ததையடுத்து, ரிசர்வ் வங்கி உட்பட, பல்வேறு நிதி நிறுவனங்களும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை குறைத்துள்ளன. ஓ.இ.சி.டி., எனும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு மட்டும், வளர்ச்சி கணிப்பை 6.60 சதவீதத்திலிருந்து, 6.80 சதவீதமாக அதிகரித்துள்ளது

 கடந்த மாதம், இந்தியாவில் சொகுசு கார்கள் உள்ளிட்ட கார்களின் விற்பனை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. பண்டிகை காலம் முடிவடைந்த பிறகும், தேவை சீராக இருந்ததால் கிட்டத்தட்ட 3.50 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன

 கடந்த மாத ஜி.எஸ்.டி., வருவாய் 8.50 சதவீதம் அதிகரித்து 1.82 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. நிச்சயமற்ற புவிசார் அரசியல் சூழல் காரணமாக, வரும் மாதங்களில் நுகர்வு பாதிக்கப்பட்டு, வரி வசூல் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

 கடந்த மாதம் 16 முதல் 30ம் தேதி வரை, அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய பங்குகளில் 17,877 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். அதிகபட்சமாக நிதித்துறை, தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் பொருட்கள் சார்ந்த பங்குகளில் முதலீடு மேற்கொண்டுள்ளனர்

 நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சியை கணக்கிடும், எச்.எஸ்.பி.சி., சேவைகள் துறை பி.எம்.ஐ., குறியீடு, கடந்த மாதம் 58.40 புள்ளிகளாக சற்றே குறைந்துள்ளது. எனினும், பணியமர்த்தல்கள் கடந்த 2005ம் ஆண்டுக்கு பின், புதிய உச்சத்தை எட்டியது

 ரிசர்வ் வங்கி, வங்கிகள் பராமரிக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தை, 4.50 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்துள்ளது. இதனால், வங்கிகளிடம் ரொக்க கையிருப்பு 1.16 லட்சம் கோடி ரூபாய் அதிகரிக்கும்.

வரும் வாரம்


 'எம்3' பணப்புழக்கம், தொழிற்சாலைகளில் நடந்த உற்பத்தி, பணவீக்க விகிதம், வங்கிகள் வழங்கிய கடனின் அளவில் வளர்ச்சி, வங்கிகளில் உள்ள வைப்பு நிதியின் அளவில் வளர்ச்சி, அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன

 நுகர்வோரின் பணவீக்கம் குறித்த எதிர்பார்ப்புகள், பணவீக்க விகிதம், உற்பத்தியாளர்களின் விலை குறியீடு, வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை, ஏற்றுமதி / இறக்குமதி விலை நிலவரம் போன்ற அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன

 பல்வேறு நாடுகளில் டிசம்பர் மாதம் விடுமுறை காலம் என்பதால், இம்மாதம் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு விற்பனை பொதுவாக குறைந்தே காணப்படும். கடந்த 2004ம் ஆண்டு முதல் கடந்த 20 ஆண்டுகளில், 13 முறை, டிசம்பர் மாதங்களில் விற்பனையைக் காட்டிலும் முதலீடே அதிகம் மேற்கொண்டுள்ளனர்.

கவனிக்க வேண்டியவை


 கடந்த வாரம் திங்களன்று, 144 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று 181 புள்ளிகள் ஏற்றத்துடனும்; புதனன்று 10 புள்ளிகள் ஏற்றத்துடனும்; வியாழனன்று 240 புள்ளிகள் ஏற்றத்துடனும்; வெள்ளியன்று 30 புள்ளிகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தது. வாரத்தின் இறுதியில் வாராந்திர அடிப்படையில், அதாவது திங்கள் முதல் வெள்ளி வரையிலான ஒட்டுமொத்த அளவீட்டில் 546 புள்ளிகள் ஏற்றத்துடன் நிப்டி நிறைவடைந்திருந்தது

 சந்தையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான நிகழ்வுகள், செய்திகள், மற்றும் உலக பங்கு சந்தைகளில் நடக்கும் மாறுதல்கள் போன்றவையே வரும் வாரத்தில் இந்திய சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாக இருக்கும். டெக்னிக்கல் அனாலிசிஸின் அடிப்படையில் பார்த்தால், வரும் வாரத்தில், நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கான சூழல் இருப்பதைப்போன்ற தோற்றமே தென்படுகிறது.

இப்போதும் கூட, டெக்னிக்கல் அனாலி சிஸ் கொண்டு செய்யப்படும் அனுமானங்கள் அடிக்கடி சரிவர செயல்படாமல் போவதற்கு வாய்ப்பிருக்கவே செய்கிறது என்பதை மறுப்பதற்கான சூழ்நிலை உருவாகவில்லை என்பதை, வர்த்தகர்கள் நினைவில் வைத்துக்கொண்டே செயல்படவேண்டும். சந்தையின் பாதையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவிலான உலகளாவிய நிகழ்வுகள் மற்றும் செய்திகள், போன்றவையே வரும் வாரத்தில் நிப்டியின் ஏற்ற / இறக்கங்களை தீர்மானிப்பவையாக இருக்கும் எனலாம்.

இதுபோன்ற கணிப்புகள் சரிவர வேலை செய்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் காலகட்டத்தில், வர்த்தகர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகம் செய்ய வேண்டும். சராசரியாக வர்த்தகம் செய்யும் அளவில் பாதிக்கும் குறைவான எண்ணிக்கையில் வர்த்தகம் செய்தல், குறுகிய அளவிலான நஷ்டத்தைக் குறைக்கும் ஸ்டாப்லாஸ்களை வைத்துக்கொள்ளுதல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது. செய்திகளின் மீது தொடர்ந்து கவனம்வைத்துக் கொண்டேயிருப்பதே நல்லதொரு வர்த்தக ரீதியான ஸ்ட்ராட்டஜியாக இருக்கும்.

நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்


நிப்டி 24,172, 23,666 மற்றும் 23,341 என்ற நிலைகளில், வாராந்திர ரீதியிலான ஆதரவையும்; 25,021, 25,364 மற்றும் 25,688 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 24,515 என்ற அளவிற்கு கீழே செல்லாமல், தொடர்ந்து அதிக அளவில் வர்த்தகமாகிக்கொண்டு இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.






      Dinamalar
      Follow us