ADDED : ஆக 09, 2025 12:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
30,000
எரிவாயு விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்வதற்காக 30,000 கோடி ரூபாயை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 12 தவணைகளில் வழங்கப்படவுள்ள இந்த தொகையை, மூன்று எண்ணெய் நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ளும்.
44,218
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், பொதுத்துறை வங்கிகள் 44,218 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன. இது கடந்த நிதியாண்டின் 39,974 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் 11 சதவீதம் அதிகம். மொத்த லாபத்தில் 43 சதவீதத்துடன் எஸ்.பி.ஐ., முதலிடம் வகிக்கிறது. இது 19,160 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.