sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

மத்திய அரசின் 'டிசைன் ஸ்டூடியோ' காத்திருக்கும் திருப்பூர் தொழில்துறை

/

மத்திய அரசின் 'டிசைன் ஸ்டூடியோ' காத்திருக்கும் திருப்பூர் தொழில்துறை

மத்திய அரசின் 'டிசைன் ஸ்டூடியோ' காத்திருக்கும் திருப்பூர் தொழில்துறை

மத்திய அரசின் 'டிசைன் ஸ்டூடியோ' காத்திருக்கும் திருப்பூர் தொழில்துறை


ADDED : ஜன 09, 2025 01:43 AM

Google News

ADDED : ஜன 09, 2025 01:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:'டிசைன் ஸ்டூடியோ' திறக்கப்பட்டதும், சர்வதேச சந்தைகளில், திருப்பூருக்கு உயரிய அங்கீகாரம் கிடைக்கும் என, பின்னலாடை தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

மத்திய அரசின் மானிய உதவியுடன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூட்டாக இயக்கும், 'நிப்ட்-டீ' கல்லுாரியில், 'டிசைன் ஸ்டூடியோ' அமைய உள்ளது.

மத்திய அரசின் 75 சதவீத மானியத்துடன், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 50,000 சதுரடி பரப்பில், 'டிசைன் ஸ்டூடியோ' அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. கட்டுமான பணி முடிந்து, அதிநவீன இயந்திரங்கள் பொருத்தும் பணி துவங்க இருக்கிறது.

'டிசைன் ஸ்டூடியோ' முழு செயல்பாட்டுக்கு வரும் போது, பல்வேறு டிசைன்களில் ஆடை வடிவமைக்கும் வாய்ப்பு உருவாகும். இதனால், இந்தியாவுக்கு என்று தனி அந்தஸ்து கிடைக்கும் என, தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து, மத்திய வர்த்தக வளர்ச்சி வாரிய உறுப்பினர் ராஜா சண்முகம் கூறுகையில், “டிசைன் ஸ்டூடியோ அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. மார்ச் மாதத்தில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது.

“வர்த்தகர்கள் அனுப்பும் 'டிசைனில்' ஆடை வடிவமைக்கும் நிலை மாறி, திருப்பூரில் உருவாகும் டிசைனுக்கு, ஆர்டர் பெறும் உயர்நிலையை அடைய முடியும்.

“சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு சென்று கொண்டிருந்த ஆர்டர்கள், திருப்பூருக்கு மாறவும் வாய்ப்புள்ளது. இதன் வாயிலாக, சர்வதேச சந்தையில், திருப்பூருக்கு உயரிய அங்கீகாரம் கிடைக்கும்,” என்றார்.






      Dinamalar
      Follow us