sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

பி.எப்., கணக்கில் இருந்து 100% பணம் எடுக்கலாம்

/

பி.எப்., கணக்கில் இருந்து 100% பணம் எடுக்கலாம்

பி.எப்., கணக்கில் இருந்து 100% பணம் எடுக்கலாம்

பி.எப்., கணக்கில் இருந்து 100% பணம் எடுக்கலாம்


ADDED : அக் 13, 2025 10:59 PM

Google News

ADDED : அக் 13, 2025 10:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி ': பணியாளர்கள் தங்களது பி.எப்., கணக்கில், 25 சதவீத குறைந்தபட்ச இருப்பு போக, மீதமுள்ள தொகையில் 100 சதவீதம் வரை பணத்தை திருப்பி எடுக்க, இ.பி.எப்.ஓ., அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற இ.பி.எப்.ஓ., குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி இ.பி.எப்.ஓ., கணக்கில் இருந்து பகுதி வாரியாக பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. பணம் எடுப்பதற்கான காரணங்கள், 13 பிரிவுகளில் இருந்து மூன்று வகையாக குறைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவை, வீட்டுவசதி தேவை மற்றும் சிறப்பு சூழல். சிறப்பு சூழல்களுக்காக பணம் எடுக்க வேண்டுமென்றால், காரணம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

இனி, சிறப்பு அசாதாரண சூழல் என்பதை தேர்வு செய்து, விளக்கமான காரணம் தெரிவிக்காமல் 100 சதவீதம் வரை பணம் எடுக்க முடியும். இதில் பணியாளர் மற்றும் நிறுவனம், இருவரின் பங்கில் இருந்தும் பணம் எடுக்கலாம்.

குறைந்தபட்சம் 12 மாதங்கள் பணியாற்றி இருந்தாலே பணம் எடுக்க அனுமதிக்கப்படும். இது நாள் வரை, அவசர காரணங்களுக்கு தவிர மற்ற அனைத்து காரணங்களுக்கும் ஐந்து முதல் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டியது கட்டாயமாகும்.






      Dinamalar
      Follow us