உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 23, 2026 01:37 AM

அ நிறம் | அளவு
நே ற்று 'அதானி பவர்' நிறுவன பங்குகள் 6 சதவீத உயர்வுடன் 216.50 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டு, பிறகு, 215.65 ரூபாயில் நிறைவடைந்தது. இதற்கு முன், கடந்த 20ம் தேதியன்று வர்த்தகமான 207.40 ரூபாய் எனும் நிலையே அதிகபட்ச விலையாக இருந்தது.
தற்போது புதிய உச்சம் எட்டப்பட்டுள்ளது. இதன்வாயிலாக, இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது. மேலும், 'டைட்டன், சன் பார்மா' போன்ற முன்னணி நிறுவனங்களையும் அதானி பவர் முந்தியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்த பங்கின் விலை 35 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த ஓராண்டில், சென்செக்ஸ் குறியீடு பெரிய மாற்றத்தை காணாத நிலையில், அதானி பவர் பங்கு 83 சதவீதம் உயர்ந்துள்ளது.
