sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 250 ரூபாயில் 'சோட்டி' எஸ்.ஐ.பி., தரவுகள் ஜனவரியில் வெளியாகிறது

/

 250 ரூபாயில் 'சோட்டி' எஸ்.ஐ.பி., தரவுகள் ஜனவரியில் வெளியாகிறது

 250 ரூபாயில் 'சோட்டி' எஸ்.ஐ.பி., தரவுகள் ஜனவரியில் வெளியாகிறது

 250 ரூபாயில் 'சோட்டி' எஸ்.ஐ.பி., தரவுகள் ஜனவரியில் வெளியாகிறது


ADDED : நவ 16, 2025 12:59 AM

Google News

ADDED : நவ 16, 2025 12:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மியூச்சுவல் பண்டுகளில், மாதம் 250 ரூபாய் முதலீடு செய்யும் 'சோட்டி' எஸ்.ஐ.பி.,களை எவ்வளவு பேர் பயன்படுத்துகின்றனர்; எந்த நிறுவனங்களில் அதிக முதலீடு வருகிறது என்பது போன்ற அடிப்படை விபரங்களை, வரும் ஜனவரி மாதம், பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வெளியிட உள்ளதாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சங்கமான 'ஆம்பி' தெரிவித்துள்ளது.

இதற்காக, ஆர்.டி.ஏ., எனப்படும் பதிவாளர்கள் மற்றும் பரிமாற்ற முகவர்கள், தங்களுடைய கணினி அமைப்புகளை மேம்படுத்தி, ஒவ்வொரு 'சோட்டி' எஸ்.ஐ.பி., களையும் கண்காணிக்க ஒரு மென்பொருளை உருவாக்கி வருவதாகவும் ஆம்பி தெரிவித்துள்ளது.

சிறு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் விதமாக, இந்த குறைந்த தொகையில் எஸ்.ஐ.பி., முதலீடை மேற்கொள்வதற்கான வாய்ப்பை செபி அறிவித்தது.

இந்த திட்டத்தை, முதலீட்டாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வினியோகஸ்தர்களுக்கு, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் சில நிபந்தனைகளுடன் 500 ரூபாய் ஊக்கத் தொகையை வழங்குகின்றன.

இந்நிலையில், பெரும் பாலான நிறுவனங்கள் தங்களின் ஆர்.டி.ஏ.,க்கள், 'சோட்டி' எஸ்.ஐ.பி.,க்களை கண்காணிக்கும் மென்பொருளை வழங்குவதற்காக காத்திருப்பதாக, ஆம்பியின் தலைமை செயல் அதிகாரி வெங்கட் சலசானி தெரிவித்துள்ளார்.

மென்பொருள் தயாரானவுடன், வரும் டிசம்பரில் தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஜனவரி மாதம் பொதுவெளியில் வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார்.

'சோட்டி' எஸ்.ஐ.பி., தற்போதுள்ள நடைமுறைகள்
குறைந்தபட்ச முதலீடு ரூ.250 (மாதத்திற்கு)
தவணை காலம் குறைந்தபட்சம் 60 மாதங்கள்
திட்ட வகை குரோத் ஆப்ஷன் வாயிலாக மட்டும் வழங்கப்படுகிறது
அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் சில குறிப்பிட்ட பெரிய திட்டங்கள் மட்டுமே
அனுமதிக்கப்படாத திட்டங்கள் கடன் திட்டங்கள், ஸ்மால் கேப், மிட் கேப் மற்றும் குறிப்பிட்ட துறை சார்ந்த திட்டங்கள்
பணம் செலுத்தும் முறை நாட்ச் அல்லது யு.பி.ஐ., ஆட்டோ- பே
கட்டுப்பாடு ஒரு முதலீட்டாளர் அதிகபட்சமாக மூன்று மியூச்சுவல் பண்டுகளில் மட்டுமே, சோட்டி எஸ்.ஐ.பி., துவங்கலாம்








      Dinamalar
      Follow us