sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 சர்வதேச சந்தையில் காப்பர் விலை 16 ஆண்டுகளில் இல்லாத உயர்வு

/

 சர்வதேச சந்தையில் காப்பர் விலை 16 ஆண்டுகளில் இல்லாத உயர்வு

 சர்வதேச சந்தையில் காப்பர் விலை 16 ஆண்டுகளில் இல்லாத உயர்வு

 சர்வதேச சந்தையில் காப்பர் விலை 16 ஆண்டுகளில் இல்லாத உயர்வு


UPDATED : ஜன 03, 2026 02:13 AM

ADDED : ஜன 03, 2026 02:11 AM

Google News

UPDATED : ஜன 03, 2026 02:13 AM ADDED : ஜன 03, 2026 02:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமீபகாலமாக உலகச் சந்தையில் தங்கம், வெள்ளி இவற்றுக்கு அடுத்தபடியாக மிகவும் கவனிக்கத்தக்க உலோகமாக காப்பர் மாறியுள்ளது. கடந்த 2009-க்குப் பிறகு, காப்பர் விலை தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் எல்.எம்.இ., எனும் லண்டன் உலோகச் சந்தையில், காப்பர் விலை 42 சதவீதம் அதிகரித்து, ஒரு டன் 12,522 டாலர் என்ற அளவில் வர்த்தகமானது.

1. டேட்டா சென்டர்கள்:


செயற்கை நுண்ணறிவு அதாவது ஏ.ஐ., தொழில்நுட்பம் வளர வளர, உலகெங்கும் பிரமாண்டமான 'டேட்டா சென்டர்கள்' நிறுவப்படுகின்றன. இந்த மையங்களில் மின்சாரத்தை கடத்துவதற்கும், குளிர்விக்கும் அமைப்புகளுக்கும் டன் கணக்கில் காப்பர் தேவைப்படுகிறது.

2. மின்சார வாகனங்கள்:


சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உலகம் மின்சார வாகனங்களை நோக்கி நகர்கிறது. ஒரு சாதாரண பெட்ரோல் காரை விட, ஒரு மின்சார வாகனத்துக்கு கிட்டத்தட்ட 4 முதல் 5 மடங்கு அதிக காப்பர் தேவைப்படுகிறது. இதுமட்டுமின்றி, சூரியஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களிலும் செம்பு அதிகம் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது.

3. வினியோக தட்டுப்பாடு:


தற்போது தேவை மிகவும் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப சுரங்கங்களில் காப்பர் உற்பத்தி அதிகரிக்கவில்லை. இந்தோனேஷியா, சிலி மற்றும் காங்கோ போன்ற நாடுகளில் உள்ள சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துகளால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. புதிய சுரங்கங்களை அமைப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் ஏற்கனவே உள்ள சுரங்கங்களில் நிலவும் தட்டுப்பாடு ஆகியவை, சந்தையில் காப்பர் கிடைப்பதை குறைத்துள்ளது.

4. புவிசார் அரசியல்கள்:


அமெரிக்கா போன்ற நாடுகள், இறக்குமதி செய்யப்படும் காப்பர் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதிக்கத் திட்டமிட்டு வருவது, சர்வதேச சந்தையில், ஒருவித பதற்றத்தையும் விலையேற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.Image 1516506

இந்தியாவில் தாக்கம்:


*இந்தியாவை பொறுத்தவரை, எம்.சி.எக்ஸ்., எனும் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், காப்பர் விலை ஒரு கிலோ 800 ரூபாய் என்றிருந்த நிலை மாறி தற்போது 1,300 ரூபாயை எட்டியுள்ளது. ஓராண்டில் கிட்டத்தட்ட 60 சதவீதம் வரை ஏற்றம் கண்டுள்ளது
*ஹிந்துஸ்தான் காப்பர் போன்ற நிறுவனங்களின் பங்குகள், முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை அளித்துள்ளன
*மின்சார ஒயர்கள், மின்விசிறிகள், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



எதிர்காலம் எப்படி இருக்கும்?


* நிபுணர்களின் கணிப்புப்படி, காப்பர் விலை குறைய வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கிறது. 'கோல்ட்மேன் சாக்ஸ்' போன்ற நிதி நிறுவனங்கள், அடுத்த சில ஆண்டுகளில் ஒரு டன் செம்பு 15,000 டாலர் வரை கூட செல்லலாம் என்று கணித்துள்ளன.
* ஒரு காலத்தில் சாதாரண உலோகமாக பார்க்கப்பட்ட செம்பு, இன்று டிஜிட்டல் மற்றும் எரிசக்தி துறையின் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறி, 'புதிய தங்கம்' ஆக பார்க்கப்படுகிறது.








      Dinamalar
      Follow us