sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 அனைத்து நிதி சேவைகளுக்கும் ஒரே சம்மதம் பெறுவது சரியா?: எஸ்.பி.ஐ., நிர்வாக இயக்குநர் கவலை

/

 அனைத்து நிதி சேவைகளுக்கும் ஒரே சம்மதம் பெறுவது சரியா?: எஸ்.பி.ஐ., நிர்வாக இயக்குநர் கவலை

 அனைத்து நிதி சேவைகளுக்கும் ஒரே சம்மதம் பெறுவது சரியா?: எஸ்.பி.ஐ., நிர்வாக இயக்குநர் கவலை

 அனைத்து நிதி சேவைகளுக்கும் ஒரே சம்மதம் பெறுவது சரியா?: எஸ்.பி.ஐ., நிர்வாக இயக்குநர் கவலை


ADDED : டிச 11, 2025 01:46 AM

Google News

ADDED : டிச 11, 2025 01:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒ ரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு நிதி தரவுகளை பகிர 'அக்கவுன்ட் அக்ரிகேட்டர்'ஆக செயல்படும் நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரே சம்மத முறை குறித்து, 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா'வின் நிர்வாக இயக்குநர் அஸ்வினி குமார் திவாரி கவலை தெரிவித்து உள்ளார்.

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும் 'போன்பே, என்.எஸ்.டி.எல்., ' போன்ற அக்கவுன்ட் அக்ரிகேட்டர் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் அனுமதியுடன் நிதி நிறுவனங்களுக்கு இடையே தரவுகளை பகிர உதவுகின்றன. கடன் வழங்குதல், முதலீட்டு மேலாண்மை, கணக்கு தொடங்குதல் போன்ற அனைத்து நிதிச் சேவைகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் ஒரே ஒரு சம்மதம் மட்டுமே பெறப்படுகிறது. இதில், தற்போது 22.50 கோடி பயனாளிகள் உள்ளனர்.

இந்நிலையில், அக்கவுன்ட் அக்ரிகேட்டர்களிடம் இருக்கும் ஒரே சம்மதம் தெரிவிக்கும் நடைமுறையில் உள்ள நுணுக்கமான விதிகளை படிக்காமலும், புரிந்துகொள்ளாமலும் வாடிக்கையாளர்கள் கையெழுத்திட்டு விடுவதாக திவாரி கவலை தெரிவித்து உள்ளார்.

தனியுரிமை சட்டங்கள் முக்கியத்துவம் பெறும் இக்காலத்தில், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான புரிதல் இல்லாதபோது, இதுபோன்ற அமைப்பு இந்தியாவில் எவ்வாறு செயல்படுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரே சம்மதம் தெரிவிக்கும் நடைமுறையில் உள்ள நுணுக்கமான விதிகளை படிக்காமலும், புரிந்துகொள்ளாமலும், வாடிக்கையாளர்கள் கையெழுத்திட்டு விடுகின்றனர்






      Dinamalar
      Follow us