என்.எஸ்.இ., முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 25 கோடியாக உயர்வு
என்.எஸ்.இ., முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 25 கோடியாக உயர்வு
UPDATED : பிப் 14, 2026 11:38 AM
ADDED : பிப் 14, 2026 11:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, இதுவரை இல்லாத அளவாக, 25 கோடியாக அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இதில், கடைசி ஒரு கோடி கணக்குகள், கடந்த 2 மாதங்களில் துவங்கப்பட்டுள்ளன. கடந்த 16 மாதங்களில் மட்டும் 5 கோடி கணக்குகள் புதிதாக துவங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தனிப்பட்ட முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 12.7 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில், நிப்டி ஆண்டுக்கு சராசரியாக 11.30 சதவீதம் வருமானம் கொடுத்ததன் காரணமாக, பங்குச்சந்தை மீது நடுத்தர வர்த்தகத்தினருக்கு அதிகரித்த நம்பிக்கையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

